ஈமானின் ஆறு தூண்கள்

ஈமானின் ஆறு தூண்கள்

"அல்லாஹ்வை நம்புதல்" என்பதன் கருத்து


"அல்லாஹ்வை நம்புதல்" என்பதன் கருத்து :

அல்லாஹ் இருக்கின்றான் என்று உறுதியாக நம்புதல். மேலும், அவன் படைத்து, பரிபாலிப்பவன் என்றும் அவனுக்கு தெய்வீக நிலை, மற்றும் அழகிய திருநாமங்கள், நற்பண்புகள் என்பன உண்டு என்றும் ஏற்றுக்கொள்ளுதல். இந் நான்கு விடயங்கள் தொடர்பாகவும்  பின்வருமாறு நாங்கள் விரிவாக  கலந்துரையாடுவோம் :




 

"அல்லாஹ் இருக்கின்றான்" என்று ஏற்றுக்கொள்வது மனிதனில் காணப்படுகின்ற இயல்பானதொரு பண்பாகும்.


இதனை நிறுவுவதற்கு எந்தவொரு ஆதாரமும் தேவையில்லை. இதன் காரணமாகவே மனிதர்களுள் பலர் அவர்களது சமய, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால், அல்லாஹ் இருக்கின்றான் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.

எனவே, அவன் இருக்கின்றான் என்பதை எமது ஆழ்மனதினால் நாம் உணர்கின்றோம். இவ்வாறான எமது இயல்பான நம்பிக்கை மற்றும் மனித உள்ளங்களில் காணப்படுகின்ற அவனை வணங்கி வழிபட வேண்டுமென்ற இயல்பான மனோ நிலை என்பவற்றின் காரணமாக கஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்கள் ஏற்படுகின்ற போது அவனிடமே தஞ்சமடைகின்றோம்.  இவ்வுணர்வுகளை சில மனிதர்கள் அசட்டை செய்யவும் அகற்றி விடவும் முயற்சிக்கின்றனர்.

பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, கேட்பவர்களின் தேவைகள் பூர்த்செய்யப்படுகின்றன, நிர்க்கதிக்குள்ளானவர்களின் வேண்டுதல்கள் அங்கீகரிக்கப்படுகின்றன போன்ற பல்வேறு நிகழ்வுகளை நாங்கள் கண்டும் பார்த்தும் வருகின்றோம்.

இவைகள் அனைத்தும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை பலமாக உறுதிப்படுத்துகின்ற  சான்றுகளாகும்.


அல்லாஹ் இருக்கின்றான் என்பதற்கான  இச்சான்றுகள் மிகத் தெளிவானதும் கணக்கிட முடியாததும் ஆகும். அவைகளுள் சில வருமாறு:-


  • ஒரு பொருள் இருக்கிறது எனில், நிச்சயம் அதை உருவாக்கிய ஒருவன் இருக்க வேண்டுமென்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே.  சதாவும் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வகைப் படைப்புக்களான இவ்வுலகிலுள்ள அனைத்தையும் உருவாக்கிய ஒரு படைப்பாளன் நிச்சயம் இருக்கவே செய்கின்றான். சந்தேகமின்றி அவனே அந்த அல்லாஹ். ஆகவே, ஒரு பொருள் எவ்வாறு தன்னை தானே உருவாக்கிக்கொள்ள முடியாதோ அவ்வாறே ஒரு படைப்பானதும், ஓர் படைப்பாளன் இன்றி உருவாக முடியாது. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் : “அல்லது, அவர்கள் எப்பொருளுமின்றி (தாமாகவே) படைக்கப்பட்டுவிட்டனரா ? அல்லது அவர்கள் தான் படைக்கின்றவர்களா ?" (அத் தூர் : 35) படைப்பாளன் ஒருவனின்றி அவர்கள் படைக்கப்படவோ அல்லது தங்களை தாங்களே அவர்கள் படைத்துக்கொள்ளவோ இல்லை. மாறாக, அல்லாஹ் ஒருவனே அவர்களைப் படைத்தான் என்பதே இந்த வசனத்தின் கருத்தாகும்.
  • வானம், பூமி, நட்சத்திரங்கள், மரஞ்செடிகொடிகள் உள்ளிட்ட படைப்புக்களைக் கொண்டு திட்டமிடப்பட்ட ஒழுங்கில் அமைக்கப்பட்டுள்ள இப்பிரபஞ்சமானது, படைப்பாளனாகிய அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கு மிகப் பலமானதொரு சான்றாகும். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "ஒவ்வொரு பொருளையும் (படைத்து,) உறுதியாக ஒழுங்குபடுத்திய,  அல்லாஹ்வுடைய (கலைத்திறன் நிறைந்த) செயலாக (அவ்வாறு நடைபெறும்)." (அந் நம்ல் : 88)
    இந்த கோள்களும் நட்சத்திரங்களும் அவைகளுக்குரிய ஓடுபாதைகளிலிருந்து சற்றும் விலகாது, நிலையனதொரு ஒழுங்கில் ஓடிக்கொண்டிருக்கின்றன. "சூரியன் அதற்குச் சந்திரனை (அணுகி)ப்பிடிக்க முடியாது; இரவு, பகலை முந்தவும் முடியாது. (இவ்வாறே கிரகங்கள், நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் (தனது) வட்டத்துக்குள் நீந்திச் செல்கின்றன." (யாசீன்: 40)

"அல்லாஹ் இருக்கின்றான்" என்பதற்கான மிகப்பெரும் ஆதாரங்களுள் ஒன்று மனிதனே ஆவான். அல்லாஹ் மனிதனுக்கு தானமாக வழங்கியிருக்கும் மூளை, நுணுக்கம் நிறைந்த புலன்கள்,முழுமையும் ஒழுங்கும் நிறைந்த ஏனைய உறுப்புக்கள் (படைப்புக்கள்) என்பனவற்றை அறிவுக் கண்ணோடு ஆழமாக சிந்திப்பவர்கள் இவ்வுண்மையைப் புரிந்துகொள்வர். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:  "மேலும், உறுதியாகவிசுவாசம்கொண்டவர்க ளுக்கு,பூமியில் அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் (பலஅத்தாட்சிள் இருக்கின்றன.அவைகளை) நீங்கள் (கவனித்து) பார்க்கமாட்டீர்களா" (அத் தாரியாத் : 20 -21)



 

"அல்லாஹ் பரிபாலிக்கும் இரட்சகனாக இருக்கின்றான்" என்று நம்புவதன் கருத்து


அல்லாஹ் அனைத்தையும் படைத்து, பரிபாலித்து, உணவளிக்கும் இரட்சகனாகவும், அவைகளின் சொந்தக்காரனாகவும் இருக்கின்றான். மேலும், உயிர்கொடுப்பவனும் மரணத்தை ஏற்படுத்துபவனும் அவனே. சகல அதிகாரங்களும் அவனுக்கே உரியது. நலன்கள் அனைத்தும் அவன் கையிலேயே இருக்கின்றன. அனைத்தின் மீதும் அவன் ஆற்றலுள்ளவன். இவைகளைச் செய்வதற்கு அவனுக்கு எந்தவொரு துணையும் தேவையில்லை என்ற மேற்படி அம்சங்களை உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்ளுதல். அவ்வாறாயின், அல்லாஹ் அவனது செயற்பாடுகள் அனைத்திலும் தனித்துவமானவன் என்பதாகும்.



எனவே, ஒரு முஸ்லிம் பின்வருவனவற்றை நம்புதல் வேண்டும்:


இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் படைத்தவன், அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. அவனை அன்றி வேறு படைப்பாளன் யாருமில்லை என்று நம்புதல்.

இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் :  "அல்லாஹ் (வே) ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன்." (அஸ் ஸுமர் : 62)


மனிதன் உருவாக்குவது என்பது, ஒரு பொருளை ஒரு நிலையிலிருந்து மற்றுமொரு நிலைக்கு மாற்றுதல் அல்லது ஒன்றுதிரட்டுதல், நிர்மாணித்தல் போன்ற செயற்பாடுகளைக் குறிக்குமே அல்லாமல் ஆரம்பமாகப் படைத்தலையோ இல்லாமையிலிருந்து உருவாக்குவதனையோ அல்லது மரணித்த பிறகு உயிர்கொடுப்பதனையோ குறிக்காது. அவன் ஒருவனே, அவனது அனைத்துப்  படைப்பினங்களுக்கும் உணவளிப்பவன், அவனையன்றி வேறெவரும் இதனைச் செய்ய முடியாது என்று நம்புதல். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "பூமியிலுள்ள எந்த ஊர்வனமும் அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்தே தவிர இல்லை." (ஹூத் : 6)


உலகிலுள்ள அனைத்திற்கும் உண்மையான சொந்தக்காரன் அவன் மாத்திரமே. அவனல்லாத வேறு யாரும் உண்மையான சொந்தக்காரர்கள் அல்லர் என்று நம்புதல். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "வானங்களுடைய, மற்றும் பூமியுடைய இன்னும் இவைகளிலுள்ள யாவற்றினுடையவும் ஆட்சி, அல்லாஹ்வுக்கே உரியது." (அல் மாஇதா : 120)


அனைத்தையும் நிர்வகிப்பவன் அவன் மாத்திரமே அவனையன்றி வேறொரு நிர்வாகி கிடையாது என்று நம்புதல். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "வானத்திலிருந்து பூமிவரை உள்ள காரியத்தை அவன் நிர்வகிக்கின்றான்." (அஸ் ஸஜதா : 5)

மனிதன், தனது வாழ்வு மற்றும் அவனது சொந்த விவகாரங்களை நிர்வகிப்பதானது, அவனுக்குச் சொந்தமான முடியுமான அவன் அதிகாரத்திற்குட்பட்ட விடயங்களோடு மாத்திரம் வரையறுக்கப்படுகின்றது. அது சிலவேளைகளில் வெற்றி அடையலாம் அல்லது தோல்வியைச் சந்திக்கலாம். ஆனால், படைப்பாளனாகிய அல்லாஹ்வின் நிர்வாகம் முழுமையானது தங்கு தடையின்றி செயற்படக்கூடியது அதனோடு எதுவும் முரண்படமுடியாது. இந்நிருவாகத்தின் பிடியிலிருந்து எதுவும் வெளிநடப்புச் செய்யமுடியாது. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் : "படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியதெனத் தெரிந்து கொள்ளுங்கள்; அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் மகத்துவமுடையவனாகிவிட்டான்." (அல் அஃறாப் : 54)



அவன் ஒருவனே அவனது அனைத்துப் படைப்பினங்களுக்கும் உணவளிப்பவன், அவனையன்றி வேறெவரும் இதனைச் செய்ய முடியாது என்று நம்புதல். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: “பூமியிலுள்ள எந்த ஊர்வனமும் அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது (பொறுப்பாக) இருந்ததே தவிர இல்லை." (அல் ஹூத் 6)


நபியவர்களது கால அறபு இணைவைப்பாளர்கள் அல்லாஹ் பரிபாலிக்கும் இரட்சகன் என்பதை நம்பியிருந்தனர்


அனைத்தையும் படைத்து, நிர்வகிக்கின்ற எஜமான் அல்லாஹ் ஒருவனே என்று நபியவர்களது காலத்தில் வாழ்ந்த இறைநிராகரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொள்வது மாத்திரம் அவர்களை இஸ்லாத்தில் நுழையச் செய்யவில்லை. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் : "மேலும் வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவன் யார் ? என்று (நபியே!) நீர் அவர்களைக் கேட்பீராயின் அ(தற்க)வர்கள், "அல்லாஹ்" என்று நிச்சயமாக கூறுவார்கள்." (லுக்மான் : 25)

அகிலத்தவர்களின் இரட்சகனாகிய அல்லாஹ் ஒருவன் மாத்திரமே படைத்துப் போஷிக்கின்ற, எஜமானன் என்று ஒருவர் ஏற்றுக் கொண்டால் அவனுக்கு இணையேதும் கற்பிக்காத நிலையில் வணக்கவழிபாடுகளை அவனுக்காக மாத்திரம் மேற்கொள்வது அவர் மீது கடமையாகும்.

அல்லாஹ் ஒருவனே அனைத்தையும் படைத்தவன் என்றும், அவனே இந்தப் பிரபஞ்சத்தை நிருவகிப்பவன், மேலும் உயிர்கொடுப்பவனும் மரணிக்கச் செய்பவனும் அவனே என்றும் ஏற்றுக் கொண்ட மனிதன் அவனல்லாத வேறொருவனுக்கு வணக்கம் செய்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? இதுவே மிகவும் மோசமான அநியாயமும் மிகப் பெரும் பாவமும் ஆகும். எனவேதான் லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு இவ்வாறு உபதேசித்து வழிகாட்டினார். "என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக, இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும் என்று கூறியதை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!)." (லுக்மான் 13)

"அல்லாஹ்வின் பார்வையில் மிகப்பெரிய பாவம் எது? என நபியவர்களிடம் வினவப்பட்ட போது "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கின்ற போது நீ அவனுக்கு இணையை ஏற்படுத்துவதாகும்" எனப் பதிலளித்தார்கள்." (அல் புகாரி : 4207, முஸ்லிம் : 86)




அல்லாஹ் பரிபாலிக்கும் இரட்சகன் என்று நம்புவதானது, மனித உள்ளங்களுக்கு அமைதியைக் கொடுக்கும்


எந்தவொரு படைப்பும் அல்லாஹ்வினுடைய ஏற்பாட்டை விட்டு விலகிச் செல்ல முடியாது. இதனை ஒருவன் உண்மையாகவே அறிந்துகொண்டால், அவனுடைய உள்ளம் அல்லாஹ்வோடு மாத்திரமே தொடர்பினைக் கொண்டிருக்கும். தனக்குத் தேவையான அனைத்தையும் அவனிடமே கேட்பான். அவனுடைய வாழ்வின் சகல விவகாரங்களிலும் அந்த அல்லாஹ்வையே நம்பி வாழ்வான். வாழ்க்கையிலே ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்களின் போது மனஉறுதியோடும் துணிவோடும் அமைதியாக நடந்துகொள்வான். இவ்வாறான நிலையிலுள்ள ஒருவன் தனது வாழ்வில் ஒரு விடயத்தை சாதிக்க விளைகின்ற போது தன்னால் முடியுமான முயற்சிகளை மேற்கொண்டு அதற்கான உதவிகளை அல்லாஹ்விடம் கேட்பதோடு  தனது கடமைகளையும் சரிவரச் செய்வான். அப்போது அவனது உள்ளம் பிறரிடமுள்ளவைகளை பார்த்து ஆசை கொள்ளாது அமைதியடைகின்றது. எனவே, அந்த அல்லாஹ்வின் கையிலேயே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. அவன், தான் விரும்புகின்றவற்றைப் படைப்பதோடு மனிதனுக்குத் தேவையானவைகளை அவனே தெரிவுசெய்கின்றான்.


அல்லாஹ் பரிபாலிக்கும் இரட்சகன் என்று நம்புவதானது மனித உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்தும்.



 

"அல்லாஹ் தெய்வீகப் பண்புகளைக் கெண்டவன்" என்று நம்புவதன் கருத்து


அந்தரங்கமான மற்றும் வெளிப்படையான அனைத்து வணக்கவழிபாடுகளுக்கும் அல்லாஹ் மாத்திரமே தகுதியானவன் என்று உறுதியாக நம்பி ஏற்றுக்கொள்வதனையே இது குறிக்கும். மேலும், பிரார்த்தனை, பயப்படுதல். பரம்சாட்டுதல், உதவிகோருதல், தொழுகை, ஸகாத், நோன்பு, போன்ற அனைத்துவகை வணக்கங்களையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே நாம் நிறைவேற்றுவோம். எனவே, அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படுகின்ற வேறு கடவுள் யாருமில்லை. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் : "(மனிதர்களே!) மேலும், உங்கள் (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே ஒரு (வணக்கத்திற்குரிய) நாயன் தான்; அளவற்ற அருளும், நிகரற்ற அன்பும் உடைய அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் (வேறு) இல்லை. (அல் பகறா 163)

"இறைவன் ஒருவனே" என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான். அதாவது, வணங்கப்படவேண்டியவன் அவன் ஒருவனே. அவனல்லாத வேறொருவனை இறைவனாக ஏற்பதோ, வணக்கம் செய்வதோ கூடாது.


அல்லாஹ் ஏகன் என்பதை ஏற்று, அவனுக்காக மாத்திரமே வணக்கங்களை மேற்கொள்வது தான் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்பதன் உண்மையான கருத்தாகும்.


"அல்லாஹ் தெய்வீகப் பண்புகளைக் கெண்டவன்" என்று நம்புவதன் முக்கியத்துவம்


பின்வரும் பல்வேறு வழிமுறைகளின் மூலம் இதன் முக்கியத்துவம் வெளிக்கொணரப்படுகின்றது:

1

அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை மாத்திரம் வணங்குவதே மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டமைக்கான இறுதி இலக்காகும். அல்லாஹ் குறிப்பிடுகின்றான் : "மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காவே படைத்துள்ளேன்.” (அத் தாரியாத் : 56)

2

றஸூல்மார்கள் அனுப்பப்பட்டமை மற்றும் இறைவேதங்கள் இறக்கியருளப்பட்டமை என்பவற்றிற்கான பின்னனி அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்பதாகும். எனவே,உண்மையாக வணங்கப்படவேண்டியவன் அல்லாஹ் மாத்திரமே என்றும் அவனல்லாத வேறு கடவுள்கள் வணங்கப்படுவதை நிராகரிக்கப்படல் வேண்டும் என்றும் ஏற்றுக்கொள்வது இதன் நோக்கமாகும். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம்; (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்,) அல்லாஹ்வையே வணங்குங்கள்; (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்." (அன் நஹ்ல் : 36)

3

அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்பதே மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய முதற் கடமையாகும். "யமன் நாட்டிற்கு முஆத் இப்னு ஜபல் (றழி) அவர்களை அனுப்பி வைக்கும் போது இதனையே அவருக்குத் தனது உபதேசமாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வேதக்கார சமூகமொன்றுக்கு நீங்கள் செல்கின்றீர்கள். எனவே, நீங்கள் அவர்களை அழைக்கும் முதல் அம்சமாக "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சாட்சி சொல்வதாக இருக்கட்டும். (அல் புகாரி : 1389, முஸ்லிம் 19)

அதாவது, அனைத்து விதமான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்காக மாத்திரமே செய்யவேண்டுமென்று அவர்களை நோக்கி அழைப்புக் கொடுங்கள் என்பதே இதன் கருத்தாகும்.

4

"லா இலாஹ இல்லல்லாஹ்" என்பதன் மிகச் சரியான கருத்து, அல்லாஹ்விற்காக மாத்திரமே வணக்கங்கள் செய்யப்படல் வேண்டுமென நம்புவதாகும். "இலாஹ்" எனும் அறபுப் பதமானது வணங்கப்படும் அனைத்தையும் பொதுவாகவே குறிக்கும் "கடவுள்" எனும் பொருளைக் கொடுக்கும் ஒரு சொல்லாகும். எனவே தான் இதற்கு "உண்மையாக வணங்கப்படுபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று பொருள் வழங்கப்படுவதோடு, அவனல்லாத வேறொருவருக்கு எந்தவொரு வணக்கங்களையும் நாம் செய்துவிடக் கூடாது என்பதையும் இது உணர்த்தி நிற்கின்றது.

5

அல்லாஹ் ஒருவனே படைத்து, அனைத்து விவகாரங்களையும் கையாள்கின்ற, அரசன் என்று நம்புவதற்குரிய தர்க்கரீதியான ஒரே விளைவு, வணக்கவழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்காக மாத்திரமே நிறைவேற்றப்படல் வேண்டுமென நம்புவதாகும்.



 

அல்லாஹ், அவனது வேதத்திலும் நபியவர்கள் தங்களது சுன்னாவிலும் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கும் அவனுக்குரிய திருநாமங்கள் மற்றும் அவன் தகுதிக்குத் தக்கதான பண்புகள் என்பனவற்றை நம்புவதனையே இது குறிக்கும்.

அல்லாஹ்வுக்கு மிக அழகிய திருநாமங்களும் முழுமைபெற்ற பண்புகளும் இருக்கின்றன. அவனது இந்தத் திருநாமங்களும் பண்புகளும் தனித்துவமானவை. இவைகளில் அவனுக்கு நிகரானது எதுவுமில்லை. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் : "அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன் பார்க்கிறவன்." (அஷ்  ஷுறா : 11) எனவே, அவனது எந்தவொரு படைப்புக்களும் அல்லாஹ்வுக்குரிய இந்த திருநாமங்கள் மற்றும் பண்புகளுக்கு நிகரான நாமங்களையோ அல்லது பண்புகளையோ கொண்டிருக்க முடியாது. அவ்வாறான நிலையிலிருந்து அல்லாஹ் தூய்மையானவனாக இருக்கின்றான்.


அல்லாஹ்வினுடைய சில திருநாமங்கள் வருமாறு :-


அல்லாஹ் கூறுகின்றான் : "அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது." (அல் பாதிஹா : 3)

அல்லாஹ் கூறுகின்றான் : "அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன் பார்க்கிறவன்." (அஷ் ஷுறா : 11)

அல்லாஹ் கூறுகின்றான் : "அவனோ (யாவரையும்) மிகைத்தோன் தீர்க்கமான அறிவுடையோன்." (லுக்மான் : 9)

அல்லாஹ் கூறுகின்றான் : "அல்லாஹ் (எத்தகையவனென்றால்) அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு நாயன் ) இல்லை." (அல் பகறா : 255)

அல்லாஹ் கூறுகின்றான் : "அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது." (அல் பாதிஹா : 2)


அல்லாஹ்வினது திருநாமங்கள் மற்றும் பண்புகள் என்பனவற்றை நம்புவதனால் ஏற்படும் நல்ல விளைவுகள்


1

அல்லாஹ்வை நன்கு அறிந்து கொள்ளல்.

ஒருவர் அல்லாஹ்வின் திருநாமங்கள் மற்றும் பண்புகள் என்பவற்றை நம்புவதானது அல்லாஹ் பற்றிய அவரின் அறிவை அதிகரிக்கச் செய்யும். இதன் விளைவாக, அல்லாஹ் மீதுள்ள அவரின் நம்பிக்கை அதிகரிக்கும் அதே வேளை, அவர் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தும் நிலையையும் பலப்படுத்தும். அல்லாஹ்வினது திருநாமங்கள் மற்றும் பண்புகளை அறிந்து கொள்ளும் ஒருவரின் உள்ளம் அல்லாஹ்வின் மகோன்னத நிலை, அவன் மீதுள்ள அன்பு, அவனுக்கு மாத்திரமே முழுமையாகக் கட்டுப்பட்டு நடக்கும் உணர்வு என்பவற்றால் நிரம்பி வழியும்.

2

அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்களைப் பயன்படுத்தி புகழுதல்.

இது அல்லாஹ்வை நினைவு படுத்துவதற்கான மிகச் சிறந்த முறைகளுள் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான்: "விசுவாசிகளே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்.”(அல் அஹ்ஸாப் : 41)

3

அல்லாஹ்வினது திருநாமங்கள் மற்றும் பண்புகளைக் கூறி பிரார்த்தித்தல்.

இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் : "இன்னும், அல்லாஹ்வுக்கு மிக்க அழகான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அழையுங்கள். (அல் அஃராப் : 180) பின்வருமாறு பிரார்த்திப்பதனை இதற்கான சிறந்த உதாரணங்களாகக் குறிப்பிடலாம்: அதிகம் ஆகாரம் அளிப்பவனே ! எமக்கு ஆகாரம் அளிப்பாயாக. அதிகம் மன்னிப்பவனே ! எம்மை மன்னித்து விடுவாயாக. அதிக அன்பு கொண்டவனே ! எமக்கு இரக்கம் காட்டுவாயாக.




வணக்கம் (இபாதா) என்பதன் பொருள் என்ன?


அல்லாஹ் விரும்பி ஏற்றுக் கொள்கின்ற அவனால் பணிக்கப்பட்ட சொல் மற்றும் செயல் சார்ந்த அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதோர் அறபுப் பதமே"இபாதா" என்பதாகும்.  இது தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற வெளிப்படையான வணக்கங்களாகவோ அல்லது அல்லாஹ்வையும் அவன் தூ தரையும் நேசித்தல், அல்லாஹ்வை அஞ்சுதல், அனைத்துவித மனித முயற்சிகளினது விளைவையும் அல்லாஹ்விடமிருந்து மாத்திரம் எதிர்பார்த்தல், அவனிடமே உதவி கோருதல் போன்ற இன்னோரன்ன உள்ரங்கமான உள்ளம் சார்ந்த வணக்கங்களாகவோ இருக்கலாம்.



"வணக்கம்" என்பது வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவியதாகும்.



"வணக்கம்" (இபாதா) என்பது அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறும் எண்ணத்தோடு செய்யப்படுகின்ற ஒரு முஃ மினுடைய அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கியதொரு சொற்பிரயோகமாகும். எனவே, இஸ்லாத்திலே "வணக்கம்" என்பது வெறுமனே தொழுகை, நோன்பு போன்ற சடங்குகளோடு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொன்றல்ல. மாறாக நல்லெண்ணத்தோடு செய்யப்படுகின்ற பயனுள்ள அனைத்து செயல்களும் வணக்கங்களாகக் கருதப்படுவதோடு, அவைகளுக்காக கூலியும் வழங்கப்படுகின்றன.

அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடப்பதற்குத் தேவையான பலத்தைப் பெறும் நோக்கில், ஒரு முஸ்லிம் சாப்பிட்டால் அல்லது குடித்தால் அல்லது தூங்கினால் கூட அதற்காகவும் அல்லாஹ் அவனுக்கு நன்மையை வழங்குகின்றான்.

எனவே, அவன் ஜீவிக்கின்ற முழு வாழ்வும் அல்லாஹ்வுக்குரியது. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்கு தேவையான சக்தியைப் பெறும் நோக்கில சாப்பிடுவது, தகாத உறவுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக திருமணம் செய்து கொள்வது, இவ்வாறான நல்லண்ணத்தோடு வியாபாரம் செய்வது, தொழில் புரிவது, சம்பாதிப்பது, கல்வி கற்பது அதற்கான சான்றிதழ்களைப் பெறுவது, அறிவுசார்ந்த ஆய்வுகள், கண்டு பிடிப்புக்களை மேற் கொள்வது, ஒரு பெண் தனது வீடு, கணவன், பிள்ளைகள் ஆகியோரை சிரத்தையோடு கவனித்துக் கொள்வது போன்ற அனைத்தும்  வணக்கங்களாகவே கருதப்படுகின்றன.

ஆகவே, நல்லெண்ணத்தோடு கூடிய மனித வாழ்வின் அனைத்துத் துறைகளும் அவர்களது பயனுள்ள அனைத்துச் செயற்பாடுகளும் வணக்கங்களாகும்.

நல்லெண்ணத்தோடு செய்யப்படுகின்ற அனைத்து மனித செயற்பாடுகளும் அவனுக்கு கூலியை (நன்மை)ப் பெற்றுக்கொடுக்கின்ற வணக்கங்களாகவே கருதப்படுகின்றன.



மனித இனமும் ஜின்களும் படைக்கப்பட்டதற்கான ஒரே பின்னணி வணக்கம் செய்வதாகும்.



அல்லாஹ் கூறுகின்றான் : "மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. அவர்களிடத்தில் (என் படைப்புக்களுக்காக) நான் யாதொரு உணவையும் நாடவில்லை அன்றியும், எனக்கு அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை. (நபியே! நீர் கூறுவீராக:) "நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் (யாவருக்கும்) மிக்க உணவளிப்பவன் பலமுடையவன் உறுதியானவன்" (அத் தாரியாத் : 56 58)

மனித இனமும் ஜின்களும் படைக்கப்பட்டதற்கான தத்துவம் அவர்கள் அவனை வணங்குவதாகும் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அவர்கள் அவனை வணங்க வேண்டுமென்ற எந்தத் தேவையும் அல்லாஹ்விற்குக் கிடையாது. மாறாக, அவர்களுக்கே அவனை வணங்க வேண்டுமென்ற தேவை உண்டு. ஏனெனில், அவர்களே அவனிடம் முழுத் தேவையுடையவர்கள்.

மனிதன், இவ்வுலகில் வாழ்வதற்கான இறைத் தத்துவத்தை மறந்து, இலக்கை உதாசீனம் செய்து, உலக இன்ப சுகங்களில் மூழ்கிவிட்டால், எந்தத் தனித்துவமும் அற்ற ஏனைய படைப்புக்களைப் போன்று அவன் மாறிவிடுகின்றான். மிருகங்கள் கூட சாப்பிட்டு மகிழ்வுருகின்றன. ஆனால், மனிதர்களைப் போன்று அவைகள் மறுமையில் விசாரிக்கப்படுவதில்லை.  அல்லாஹ் கூறுகின்றான் : "இன்னும், நிராகரிக்கின்றார்களே அத்தகையவர்கள் (உலக) சுகத்தை அனுபவித்துக் கொண்டும், கால்நடைகள் தின்பதைப் போல் தின்று கொண்டும் இருக்கிறார்கள்; (நரக) நெருப்பே அவர்களின் ஒதுங்குமிடமாகும்." (முஹம்மத் : 12)

மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை உதாசீனப்படுத்துகின்ற போது, அவன் இந்த மிருகங்களைப் போன்று ஆகிவிடுகின்றான்.

ஆனால், பகுத்தறிவு இல்லாத இம்மிருகங்களுக்கு மாற்றமாக, மனிதன், அவனது அசிரத்தைப் போக்கு காரணமாக தண்டிக்கப்படுவான். ஏனெனில், மிருகங்களுக்கு இல்லாத பகுத்தறிவும் புத்தியும் மனிதனுக்கு உண்டு. அதன் மூலம் நன்மைகளையும் தீமைகளையும் அவனால் புரிந்து கொள்ள முடியும்.



வணக்கத்திற்கான தூண்கள் (அடிப்படைகள்):



அல்லாஹ் விதியாக்கிய வணக்கமானது, இரு முக்கிய தூண்களில் அமைக்கப்பட்டுள்ளது.

முதற் தூண் : முழுமைபெற்ற தன்னடக்கம் மற்றும் பயம்.

இரண்டாவது தூண் : அல்லாஹ்வை முழுமையாக நேசித்தல்.

எனவே, அல்லாஹ் தனது அடியார்களுக்கு விதியாக்கிய வணக்கங்களோடு, பின்வரும் அம்சங்கள் இணைந்திருப்பது அவசியமாகும்.

அல்லாஹ்வுக்கு தனது முழுமையான பணிவையும் தன்னடக்கத்தையும் வெளிக்காட்டுவதோடு, அவன் குறித்த அச்சத்தையும் கொண்டிருத்தல்.

அல்லாஹ்வை உச்ச நிலையில் முழுமையாக நேசித்தல், அவனிடம் மன்றாடுதல், அவனிடமிருந்து நன்மைகளை எதிர்பார்த்தல் போன்ற நிலைகளைக் கொண்டிருத்தல்.

இதனடிப்படையில், அல்லாஹ் பற்றிய அச்சமோ, தன்னடக்கமோ இல்லாத நிலையில் அல்லாஹ்வை நேசித்தல் என்பது வணக்கமாக மாட்டாது. (இது உணவையும் சொத்தையும் நேசிப்பது போன்றது)  இது போன்றே, அல்லாஹ் மீது நேசம் கொள்ளாத நிலையிலுள்ள அல்லாஹ் பற்றிய அச்சமும் வணக்கமாகக் கருதப்படமாட்டாது. (இது மனிதனை வேட்டையாடும் மிருகங்களையோ அல்லது அநியாயக்கார ஆட்சியாளனையோ பயப்படுவதைப் போன்றதாகும்.)

ஒரு செயலைச் செய்கின்ற வேளை  அல்லாஹ் பற்றிய பயமும், அவன் மீது நேசமும் ஒன்றரக் கலந்து விடுகின்ற போது தான் அது வணக்கமாக மாறும். வணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே செய்யப்படல் வேண்டும்.

(இபாதா) வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, அவை அல்லாஹ்விற்காக மாத்திரமே செய்யப்படுகின்றது என்ற மனத்தூய்மையும் நபியவர்களின் வழிகாட்டலை பின்பற்றிய நிலையில் செய்யப்படுவதும் நிபந்தனைகளாகும்.



வணக்கத்திற்கான நிபந்தனைகள்



  • ஒரு வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உண்டு :
    • 1

      அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில், வணக்கத்தை அவன் ஒருவனுக்கு மாத்திரம் மனத்தூ ய்மையோடு செய்தல்.

    • 2

      அல்லாஹ்வின் தூதரது வழிகாட்டலைப் பின்பற்றிய நிலையில் செய்தல்.

இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "ஆம்! எவர் தன் முகத்தை அவர் நன்மை செய்துகொண்டிருக்கிற நிலையில் அல்லாஹ்வுக்காக ஒப்படைக்கிறாரோ அவருடைய நற்கூலி அவருடைய இரட்சகனிடம் அவருக்குண்டு. (இத்தகையோர்) அவர்கள் மீது எத்தகைய பயமுமில்லை. அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்." (அல் பகறா : 112)
(أسلم وجهه لله) என்ற வாசகத்தின் கருத்தாவது :- அல்லாஹ் ஏகன் என்பதைப் புரிந்து, அவனுக்கு மாத்திரம் மனத்தூ ய்மையோடு வணக்கத்தைச் செய்தவர் என்பதாகும். (وهو محسن) என்ற வார்த்தைகளின் பொருளாவது: அல்லாஹ்வின் சட்டத்தையும் அவன் தூதரின் வழிகாட்டலையும் பின்பற்றிய நிலையில் (வணக்கத்தை) நிறைவேற்றுபவர் என்பதாகும்.



நபியவர்களது வழிகாட்டலைப் பின்பற்றுவதானது, தொழுகை, நோன்பு, அல்லாஹ்வை தியானித்தல் போன்ற தூய்மையான வணக்கங்களுக்கு மாத்திரமே நிபந்தனையாகும்.

"இபாதா" எனும் பொதுவான கருத்தில் பயன்படுத்தப்படுகின்ற, அல்லாஹ்விடமிருந்து நன்மையை எதிர்பார்த்து நல்லெண்ணத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற மனிதனின் வழக்கமான செயற்பாடுகளுக்கு (உதாரணமாக, அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடப்பதற்குத் தேவையான சக்தியைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தோடு உடற்பயிற்சியில் ஈடுபடுதல், தனது குடும்பத்திற்கு செலவு செய்யும் எண்ணத்தோடு வர்த்தகத்தில் ஈடுபடுதல்) நபியவர்களின் வழிகாட்டலை பின்பற்றுதல் வேண்டும் என்ற நிபந்தனை அவசியம் கிடையாது.  அங்கு நபியவர்களது போதனைகள் மீறப்படாமல் "ஹராமான" செயல்கள் தவிர்க்கப்படுவது மாத்திரமே போதுமானது.

அல்லாஹ்விற்கு இணைவைத்தல் (ஷிர்க்)


  • அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் (ஷ பிர்க்) என்பது "அல்லாஹ்விற்கு மாத்திரமே தெய்வீகப் பண்புகள் உண்டு" என்ற நம்பிக்கைக்கு முரணானதாகும்.
    தெய்வீகப் பண்புகள் அல்லாஹ்விற்கு மாத்திரமே உண்டு என்று நம்புவதும், வணக்கங்கள் அனைத்தும் அவனுக்கு மாத்திரமே செய்யப்படல் வேண்டுமென்பதும் மிகப் பெரியதும் மிகவும் முக்கியமானதுமான கடமைகளாக இருக்குமெனில், "ஷ பிர்க்" என்பது அல்லாஹ்வின் பார்வையில் மிகப்பெரிய பாவமாகவே கருதப்படும்.
    "தௌபா" இன்றி அல்லாஹ் மன்னிக்காத ஒரே பாவம் இதுவாகும். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் :
    "நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க(வே)  மாட்டான் இதனைத் தவிர (மற்ற) எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான்." (அன்நிஸா : 48)
    நபி (ஸல்) அவர்களிடம் பாவங்களில் மிகப் பெரியது எது எனக் கேட்கப்பட்டபோது அல்லாஹ் உம்மைப் படைத்த நிலையில் நீ அவனுக்கு இணைவைப்பதாகும் என்று கூறினார்கள். (அல் புகாரி : 4207, முஸ்லிம் 86)
  • "ஷிர்க்" வணக்க வழிபாடுகளை செல்லுபடி அற்றதாகவும் பெறுமானம் அற்றதாகவும் ஆக்கிவிடுகின்றது.
    இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
    "இன்னும், அவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்திருந்தால், அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான)வைகள் (யாவும்) அவர்களை விட்டு அழிந்துவிடும்." (அல் அன்ஆம் : 88)
    "ஷிர்க்" ஆனது இணை (ஷிர்க்) வைத்தவனை நரகத்தில் நிலையாக இருக்க வைத்து விடும் ஒரு பாவமாகும்.
    இதனை அல்லாஹ் இங்கு இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
    "நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர்மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்துவிடுகின்றான் மேலும், அவர் தங்குமிடம் நரகம்தான்." (அல் மாஇதா: 72)



ஷிர்க் என்பது இரு வகைப்படும் : பெரிய ஷிர்க், சிறிய ஷிர்க்.


  1. பெரிய ஷிர்க்: ஒருவர், வணக்கங்களுள் ஒன்றை அல்லாஹ் அல்லாத ஒருவனுக்குச் செய்வதனையே இது குறிக்கும்.

    அல்லாஹ் விரும்புகின்ற செயல்களையோ அல்லது சொல், சார்ந்த விடயங்களையோ அல்லாஹ்வுக்காகச் செய்வதானது, அவனை ஏகத்துவப்படுத்துவதாகவும் உண்மையான நம்பிக்கையாகவும் கருதப்படும்.
    இவைகளை பிறருக்காகச் செய்வதானது, "ஷிர்க்" ஆகவும் இறைநிராகரிப்பாகவும் நோக்கப்படும்.

    இவ்வகைச் ஷிர்க்குக்கான உதாரணங்கள்:
    ஒருவர், தனது நோயை குணப்படுத்துமாறோ அல்லது சொத்துசெல்வங்களை விஸ்தரித்துத் தருமாறோ அல்லாஹ் அல்லாத வேறொருவரிடம் கேட்டல், அல்லது அல்லாஹ் அல்லாத வேறொருவரிடம் தனது காரியங்களை பரம்சாட்டுதல் அல்லது அவனல்லாத வேறொருவருக்கு "ஸுஜூது” செய்தல்.
    அல்லாஹ் கூறுகின்றான்:
    "இன்னும், உங்களுடைய இரட்சகன் கூறுகிறான் : "நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தியுங்கள்." (ஙாபிர் : 60)
    அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் விசுவாசிகளாக இருந்தால், (உங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள் என்று கூறினார்கள். (அல் மாஇதா : 23)
    மேலும், அல்லாஹ் கூறுகின்றான் :
    "ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குச் சிரம் பணியுங்கள் மேலும் (அவனையே) வணங்குங்கள்." (அன் நஜ்ம் : 62)
    எனவே, யாராவது ஒருவர் வணக்கங்களை பிறருக்காக மேற்கொண்டால், அவர் இணை வைத்தவராகவும் இறைநிராகரிப்பாளராகவும் மாறிவிடுகின்றார்.

  2. சிறிய ஷிர்க்: பெரிய ஷிர்க்கிற்கு வழிவகுக்குகின்ற அல்லது அதற்கு இட்டுச் செல்லுகின்ற அனைத்து விதமான சொல், செயல் சார்ந்த விடயங்களையே இது குறிக்கும்.

    இவ்வகைச் ஷிர்க்குக்கான உதாரணங்கள் :
    மனிதர்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக சிலவேளைகளில் தொழுகைகளை நீட்டுதல், அவர்கள் பார்த்துப் புகழ வேண்டுமென்பதற்காக சிலவேளைகளில் குர்ஆன் ஓதுவதையோ அல்லது அல்லாஹ்வைத் துதி செய்வதையோ சப்தமிட்டுச் செய்தல்.
    இதனையே நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
    "உங்களிடையே சிறிய ஷிர்க் ஏற்படுவதனையே நான் அதிகம் பயப்படுகின்றேன். அப்போது,நபியே! "சிறிய ஷிர்க்" என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் வினவினர். அதற்கு நபியவர்கள் "முகஸ்துதி" எனப் பதில் கூறினார்கள். (அஹ்மத் : 23630)
    எவ்வாறாயினும், ஒருவன் அடிப்படையான வணக்கங்களை மனிதர்களுக்காகச் செய்தால், அவன் தொழுதவனாகவோ அல்லது நோன்பு நோற்றவனாகவோ கருதப்படமாட்டான்.
    இது உண்மையில் நயவஞ்சகர்களின் செயலாகும். இவ்வாறு செய்வது பெரிய ஷிர்க்காகும். இது இவனை இஸ்லாத்திலிருந்தே வெளியேற்றிவிடும் ஓர் அம்சமாகும்.



மனிதர்களிடம் கேட்பது ஷ பிர்க்கெனக் கருதப்படுமா?



மாயை, மூடநம்பிக்கை, மற்றும் அல்லாஹ் அல்லாதவைகளுக்கு மனிதர்கள் தலைகுனிந்து நடத்தல் போன்றவற்றிலிருந்து மனித உள்ளங்களை விடுவிப்பதை நோக்காகக்கொண்டே இஸ்லாம் தோன்றியது.

எனவே, இறந்துபோன பிணங்களிடம் அல்லது சடப்பொருட்களிடம் கேட்பதுவோ அல்லது அவைகளுக்கு தலைகுனிந்து பணிந்து நடப்பதுவோ கூடாது.

அவ்வாறு செய்வதானது மூடநம்பிக்கை மற்றும் ஷிர்க் சார்ந்த விடயமாகும்.

உயிர் வாழும் ஒருவரிடம் அவருக்கு முடியுமான விடயங்களைச் செய்து தருமாறு கேட்பதைப் பொறுத்தமட்டில், அது அனுமதிக்கப்பட்டதாகும்.

உதாரணமாக, ஒருவரிடம் தனக்கு உதவி செய்யுமாறோ அல்லது   மூழ்கும் நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறோ அல்லது அல்லாஹ்விடம் தனக்காகப் பிரார்த்திக்குமாறோ கேட்டுக் கொள்வது பிழையாகாது.


  • இறந்த ஒருவரிடமோ அல்லது சடப்பொருட்களிடமோ கேட்பது (பிரார்த்தனை புரிவது) அனுமதிக்கப்பட்டுள்ளதா ?
    • ஆம்

      இது, இஸ்லாத்திற்கும் நம்பிக்கைக்கும் முரணானதொரு ஷ பிர்க்கான விடயமே ஆகும்.
      ஏனெனில், இவைகளுக்கு எமது வேண்டுதலை (பிரார்த்தனையை) செவிமடுக்கவோ பதிலளிக்கவோ முடியாது.
      பிராத்தனை என்பது ஒரு வணக்கமாகும். இதனை அல்லாஹ் அல்லாத ஒன்றுக்குச் செய்வது ஷிர்க் ஆகும். (இஸ்லாத்திற்கு முன்னர் வாழ்ந்த அறபிகளிடம் காணப்பட்ட ஷிர்க் யாதெனில் மரணித்தவர்களிடமும் சடப்பொருட்களிடமும் பிரார்த்திப்பது ஆகும்)

    • இல்லை

      பேச்சை அல்லது வேண்டுதலை செவிமடுக்கும் உயிருள்ள ஒருவனிடம் நாம் கேட்க முடியும்.
      இயலுமான விடயங்களில் உனக்கு உதவி செய்யுமாறு ஒருவர் கேட்கப்பட்டால், உனது வேண்டுகோளுக்கு அவர் பதிலளிக்க முடியுமானவரா ?

      • ஆம்

        இது, அனுமதிக்கப்பட்டதாகும். அத்தோடு நாளாந்த நடவடிக்கைகளின் போது மனிதர்களோடு உறவாடுவதற்கும் தொடர்பு கொள்வதற்குமான பொதுவான ஒரு முறையாகும்.

      • இல்லை

        உயிரோடு உள்ள ஒரு மனிதரிடம் அவருக்கு இயலாத ஒரு விடயத்தைச் செய்து தருமாறு அவரிடம் கேட்பது, இஸ்லாத்திற்கு முரணான பெரிய ஷ பிர்க் ஆகும்.
        ஏனெனில், இது அல்லாஹ் அல்லாத ஒருவரிடம் பிரார்த்திப்பதாகும். மலட்டுத்தன்மை கொண்ட ஒருவர் நல்ல பிள்ளைகளைத் தனக்குத் தருமாறு உயிரோடுள்ள ஒருவரிடம் கேட்பது இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.

 உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரிடம் அவருக்கு இயலுமான ஒன்றைச் செய்து தருமாறு கேட்பது, மனித உறவுகளுக்கானதொரு முறையாகவும் அனுமதிக்கப்பட்ட அன்றாட நடவடிக்கைகளுள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.


ஈமானின் (நம்பிக்கை) மிக உயர்ந்த நிலை


ஈமானின் (நம்பிக்கை) மிக உயர்ந்த நிலை


ஈமான் வித்தியாசமான பல்வேறு தராதரங்களைக் கொண்டது. ஒரு முஸ்லிம், அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை அலட்சியப்படுத்தும் போது அல்லது பாவங்களைச் செய்யும் போது அவரது ஈமானின் அளவு குறைவடைகின்றது.

வணக்கங்கள் செய்தல், அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அஞ்சி வாழும் நிலை என்பன அதிகரிக்கும் போது அவரது ஈமானும் அதிகரிக்கின்றது. இஸ்லாம் கூறும் "இஹ்ஸான்" எனும் நிலையே ஈமானின் மிக உயர்ந்த நிலையாகும். இதனையே நபியவர்கள் பின்வருமாறு அறிமுகப்படுத்தினார்கள். "அல்லாஹ்வை நீர் பார்ப்பது போன்று, அவனை நீர் வணங்குவது. அல்லாஹ்வை நீர் பார்க்கா விட்டாலும் அவன் உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்". (அல் புகாரி : 50, முஸ்லிம் : 8)

எனவே, நீ உட்காருவது, எழுந்து நிற்பது, ஆபத்தான மற்றும் வேடிக்கையான நிலைகளில் இருப்பது போன்ற எல்லா நேரங்களிலும் அல்லாஹ் உன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றான் என்று நீ நினைத்துக் கொள்ள வேண்டும்.

எந்நேரமும் உன்னை அவன் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை நீ அறிந்தால், அவனுக்கு மாறு செய்ய மாட்டாய்.

அல்லாஹ் எப்போதும் உன்னுடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டால், பயமோ, நிராசையோ உன்னை ஆட் கொள்ளாது.

தொழுகை மற்றும் பிராத்ர்தனை என்பவற்றின் மூலம் அல்லாஹ்வோடு சம்பாஷனை செய்து கொண்டிருக்கும் போது நீ எவ்வாறு தனிமையின் வெருட்சியை உணர முடியும் ? வெளிப்படையாகவோ அல்லது இரகசியமாகவோ செய்யும் அனைத்தையும் அவன் அறிந்து கொண்டிருக்கின்றான் என்பதை மிக உறுதியாக நம்பி வாழும் நீ எவ்வாறு ஒரு பாவத்தை செய்ய முடியும் ?

எப்படியோ, நீ ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, அதிலிருந்து மீண்டு அதற்காக பாவமன்னிப்புக் கோரினால், உண்மையில் அல்லாஹ் உன்னை மன்னிப்பான்.




அல்லாஹ்வை நம்புவதன் மூலம் ஏற்படும் பயன்கள்


அல்லாஹ்வை நம்புவதன் மூலம் ஏற்படும் பயன்கள்


1

அனைத்து விதமான துன்ப துயரங்களிலிருந்தும், எதிரிகளின் சதிகளிலிருந்தும் அல்லாஹ் நம்பிக்கையாளர்களைப் பாதுகாப்பான். இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் : "நிச்சயமாக அல்லாஹ் விசுவாசங் கொண்டவர்களை (நிராகரிப்போரின் தீங்கு அவர்களை அணுகாது) தடுத்துக் கொள்கிறான்." (அல் ஹஜ் : 38)

2

அல்லாஹ்வை நம்புவதானது, மகிழ்ச்சியும் சுபீட்சமும் நிறைந்த மணமானதொரு வாழ்க்கையைப் பெறுவதற்குத் காரணமாக அமையும். அல்லாஹ் கூறுகின்றான் : "ஆண் அல்லது பெண் அவர் விசுவாசங்கொண்டவராக இருக்க, யார் நற்செயலைச் செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை மணமான வாழ்க்கையாக வாழச் செய்வோம். (அன் நஹ்ல் : 97)

3

அல்லாஹ்வை நம்புவதானது, மனித உள்ளங்களைமூடநம்பிக்கைகளிலிருந்து தூ ய்மைப் படுத்தும். உண்மையில் அல்லாஹ்வை ஒருவர் நம்பினால், அவரது அனைத்து விவகாரங்களையும் அகிலத்தவரின் இரட்சகனான அல்லாஹ்விடமே முழுமையாக ஒப்படைத்து விடுவார். அந்த அல்லாஹ்வே உண்மையான இறைவன், அவனின்றி வேறு இறைவன் கிடையாது. இந்நம்பிக்கையின் விளைவாக, அவர் யாருக்கும் அஞ்ச மாட்டார். மனிதர்களுள் யாருக்கும் அவருடைய உள்ளத்தை அர்பணிக்க மாட்டார். இவ்வாறான இந்நினைவு, அனைத்து விதமான மூட நம்பிக்கைகள் மற்றும் தவறான எண்ணங்களிலிருந்து அவரை விடுவிக்கும்.

4

அல்லாஹ்வை நம்புவதன் மிக உன்னத விளைவு :
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெறல், சுவனம் நுழைதல், நிலையான இன்பத்தையும் அல்லாஹ்வின் எல்லையற்ற அன்பையும் பெறல்.




Belief in the Angels



The Meaning of Belief in Allah’s Angels



This means firm belief that they exist, that they belong to the unseen world, not our world, and that they are honoured and pious servants who worship Allah as He deserves to be worshipped, execute His commands and never disobey Him.

The Qur’an says about them, “They are honoured servants. They do not precede Him in speech and they act on His command.” (Soorat Al-Anbiyyaa’, 21:26-7)

Belief in them is one of the six pillars of eemaan (faith), as the Qur’an states, “The Messenger believes in that which has been revealed to him from his Lord and so do the believers. Each one believes in Allah and His angels and His books and His messengers.” (Soorat Al-Baqarah, 2:285)

When the Prophet ﷺ was asked about faith, he said, “It is to believe in Allah, His angels, His books, His messengers, the Last Day and to believe in the divine decree, the good and the bad of it.” (Saheeh Muslim: 8)



What Does Belief in the Angels Include?



1

Belief in their existence: We believe that Allah made them from light and created them with a natural predisposition to worship and obey Him.

2

Belief in those angels whose names have been mentioned to us, such as Jibreel (Gabriel). We also generally believe in all those whose names have not been mentioned to us.

3

Belief in their attributes that have been mentioned to us. These include the following:


• They belong to the unseen world whom Almighty Allah created solely for His worship. They have no divine attributes whatsoever and are naturally disposed to show complete obedience to Allah, as the Qur’an states, “They do not disobey Allah in respect of any order He gives them and carry out what they are ordered to do.” (Soorat At-Tahreem, 66:6).


• Allah created them from light, as evidenced by the hadeeth, “The angels were created from light.” (Saheeh Muslim: 2996).


• They have wings, as the Qur’an states, “All praise is due to Allah, the Originator of the heavens and the earth, who made the angels messengers with two, three or four pairs of wings. He increases in creation what He pleases; surely, Allah has power over all things.” (Soorat Faatir, 35:1).


4

Belief in the duties which have been mentioned to us and which they carry out with Allah’s command. These include:


• The angel charged with the task of conveying Allah’s revelation to His messengers, namely, Jibreel (Gabriel).


• The angel charged with the task of taking away the souls of those destined to die, namely the Angel of Death and his assistants.


• The angels charged with the task of recording all the good and bad deeds people do, known as the Noble Scribes (al-kiraam al-kaatiboon).



Benefits of Belief in the Angels


Belief in the angels has numerous benefits in the believer’s life. These include the following:

1

Being aware of Allah’s absolute strength and power: The magnificent and great creation of the angels clearly testify to the greatness of their Creator. The fact that Allah ﷻ created the mighty angels from light and with wings makes us appreciate His attributes with the importance and appreciation that He deserves and revere Him even more.

2

Observing righteousness: The firm belief that some angels record all our deeds prompts us to fear Allah ﷻ and to try not to disobey Him, whether we are alone or with others.

3

Observing patience while carrying out our duties towards Allah: When we become aware of the infinite number of angels in this vast universe who obey Allah and constantly worship Him, along with us, as He should be worshipped, we become prompted to endure all the adversities in carrying out our duties towards Allah. We also experience a great feeling of joy and reassurance.

4

Showing gratitude to Allah: The fact that Almighty Allah has created some angels whose task is to guard people against harm prompts us to thank Him for His divine care.


The Prophet ﷺ informs us in a hadeeth  that there is no space in the seven heavens a foot length or a hand-span or a palm’s width which does not have an angel standing, bowing or prostrating.


இறை வேதங்களை நம்புதல்.



"இறை வேதங்களை நம்புவது" என்பதன் பொருள்:



அல்லாஹ் தனது அடியார்களுக்காக அவனது தூதர்கள் மீது சில வேதங்களை இறக்கியருளியிருக்கின்றான் என்றும் உண்மையாக, அவனது தகுதிக்கேற்ற வகையில் அவன் பேசிய பேச்சுக்களையே இவைகள் கொண்டிருக்கின்றன என்றும் இந்த வேதங்களில் சத்திய ஒளியும் மனிதனின் ஈருலக வாழ்விற்குமான வழிகாட்டலுமே இருக்கின்றன என்றும் உறுதியாக நம்புவதனையே இது குறிக்கும்.

இந்த வேதங்களை நம்புவதானது, ஈமானின் ஆறு தூண்களுள் ஒன்றாகும். இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் : "விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்னுடைய (இத்) தூதர் மீது இறக்கிவைத்த இவ்வேதத்தையும்,(இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதங்களையும் விசுவாசியுங்கள்." (அந் நிஸா : 136)

அவனது தூதரையும் அல்லாஹ்வையும் நபியவர்கள் மீது அவன் இறக்கியருளிய குர்ஆன் எனும் வேதத்தையும் அவ்வாறே இதற்கு முன்னர் இறக்கியருளப்பட்ட அனைத்து வேதங்களையும் நம்புமாறு அல்லாஹ் இவ்வசனத்தில் பணிக்கின்றான்.

ஈமானைப் பற்றி நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: "அல்லாஹ், அவனது மலக்குகள், வேதங்கள், தூதர்கள் மற்றும் மறுமை நாள், நல்லது கெட்டது உள்ளிட்ட அவனது விதி என்பவற்றை நீ நம்புவதாகும்" (முஸ்லிம் : 8)

எழுத்தணிக் கலையின் மிகப் பலமான வரையறைகளை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நுட்பமாக புனித அல் குர்ஆன் எழுதி முடிக்கப்பட்டுள்ளது.




வேதங்களை நம்புவதானது எவ்வாறான விடயங்களைக் கொண்டுள்ளது ?



1

வேதங்கள் உண்மையாக அல்லாஹ்விடமி ருந்துஇறக்கியருளப்பட்டன என்று நம்புதல்.

2

வேதங்கள் அல்லாஹ்வினது பேச்சுக்கள் என்று நம்புதல்.

3

பின்வருவன போன்ற அல்லாஹ் பெயர் குறித்து குறிப்பிடும் வேதங்களை நம்புதல். முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட வேதம் அல் குர்ஆன் மூஸா (அலை) அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட வேதம் தவ்ராத் ஈஸா (அலை) அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட வேதம் இன்ஜீல்.

4

இவ்வேதங்களில் இடம்பெற்றுள்ள நம்பகமான செய்திகளை நம்புதல்  (உண்மைப்படுத்தல்)





அல் குர்ஆன் கொண்டிருக்கும் தனித்துவங்களும் சிறப்பியல்புகளும்:



குர்ஆன் என்பது, எமது நபியும் முன்மாதிரியுமான முஹம்மத் (ஸ ல்) அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளாகும்.

எனவே, இதனை ஒரு முஸ்லிம் மதிக்க வேண்டும். இதன் சட்டங்களை கடைப்பிடித்து நடக்க முயற்சிப்பதோடு இதனை ஓதவும் இதன் கருத்துக்களை ஆழமாகச் சிந்தித்துணரவும் வேண்டும்.

உலகில் எமது வழிகாட்டியாகவும் மறுமையில் எமது வெற்றிக்குக் காரணியாகவும் இந்த அல்குர்ஆன் இருக்கின்றமையானது, இதன் மகிமைக்குப் போதுமான எடுத்துக்காட்டாகும்.


முன்னைய இறை வேதங்களுக்கு இல்லாத பல்வேறு தனித்துவங்களும் சிறப்பியல்புகளும் அல் குர்ஆனுக்கு உண்டு. அவைகளுள் சில பின்வருமாறு :

1

புனித அல்குர்ஆன் இறைச் சட்டங்களின் சுருக்கத்தினைக் கொண்டுள்ளது. மேலும் இது, முன்னைய வேதங்களில் இடம்பெற்றுள்ள "அல்லாஹ்வை மாத்திரமே வணங்கவேண்டும்" என்ற இறைவனின் உத்தரவுகள் என்பன போன்ற விடயங்களை உண்மைபடுத்தி,உறுதிப்படுத்தவதாகவே அமைந்துள்ளது.

அல் குர்ஆன் கூறுகின்றது : "மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கிவைத்தோம் இது வேதத்திலிருந்து தனக்கு முன்னுள்ளவற்றை உண்மையாக்கி வைக்கக்கூடியதாகவும், அவற்றைப் பாதுகாப்பதாகவுமிருக்கிறது. (அல் மாஇதா : 48)

(مصدقا لما بين يديه من الكتاب) என்ற வாசகங்களின் கருத்து : முன்னைய வேதங்களில் இடம்பெற்றுள்ள நம்பிக்கைகள் மற்றும் உண்மைச் செய்திகள் என்பவற்றோடு இது (அல் குர்ஆன்) உடன்படுகின்றது என்பதாகும். (ومهيمنا عليه) எனும் வாசகத்தின் கருத்து: முன்னைய வேதங்களுக்கு இது சான்றாக இருக்கின்றது என்பதாகும்.

2

இன, மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் இதனைப் பின்பற்றி, இதன் போதனைகளைச் செயற்படுத்துவது கட்டாயமாகும். அல்குர்ஆன் இறக்கியருளப்பட்ட காலத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் வாழுகின்ற எந்தவொரு சமூகமாக இருந்தாலும் கூட இதனையே அவர்கள் பின்பற்ற வேண்டும். ஆனால், முன்னைய வேதங்கள் இவ்வாறானது அல்ல. அவைகள் குறித்ததொரு காலத்தில் வாழுகின்ற குறித்ததொரு சமூகத்திற்கென்று மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் இந்தக் குர்ஆனைக் கொண்டு உங்களுக்கும், (இது) சென்றடைந்தவர்களுக்கும், நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே இது எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (அல் அன்ஆம் : 19)

3

புனித அல்குர்ஆனை பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் அவனிடமே வைத்துள்ளான். எனவே, இதில் முன்னரோ, பின்னரோ எந்தவொரு மாற்றங்களும் இடம்பெற முடியாது. அல்லாஹ் கூறுகின்றான் : "நிச்சயமாக நாம்தான (திக்ரு என்னும் இவ்) வேதத்தை (உம்மீது) இறக்கிவைத்தோம் நிச்சயமாக நாமே அதனை பாதுகாப்பவர்கள். (அல் ஹிஜ்ர் : 9) எனவே, இதன் அனைத்துச் செய்திகளும் நம்பகமானதும் அவசியம் உ ண்மைபடுத்தப்படவேண்டியதுமாகும்.



அல்குர்ஆனின் பால் எமக்குள்ள கடமைகள் யாது ?
  • இது அல்லாஹ்வின் மிக உண்மையானதும் மிகச் சிறந்ததுமான பேச்சுக்களின் தொகுப்பாக இருப்பதனால், இந்த அல்குர்ஆனை நேசிப்பதும் அதன் கௌரவத்திற்கு உரிய மதிப்பை வழங்குவதும் கட்டாயக் கடமைகள் ஆகும்.
  • அல் குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் வசனங்கள் என்பவற்றின் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திப்பதுடன் அவற்றை ஓதிப் பாராயணம் செய்தல் வேண்டும். மேலும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்வதற்காக அல்குர்ஆனின் போதனைகள்,உண்மைச் செய்திகள் மற்றும் கதைகள் பற்றி சிந்தித்து அவற்றிற்கு முன்னால் எமது வாழ்வை முன்நிறுத்திப் பார்க்க வேண்டும்.
  • அல்குர்ஆனினது சட்டங்களை பின்பற்றுவதும் அவற்றின் ஆணைகள் மற்றும் ஒழுக்க நெறிகளுக்குக் கட்டுப்பட்டு அவைகளை எமது வாழ்வியல் முறைகளாக மாற்றிக் கொள்வதும் அவசியமாகும்.

நபியவர்களது குணவியல்புகள் பற்றி ஆயிஷா (றழி) அவர்களிடம் வினவப்பட்ட போது அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள் "அவர்களது குணம் அல் குர்ஆனாகவே இருந்தது" (அஹ்மத் : 24601, முஸ்லிம் : 746)

இதன் கருத்து : நபியவர்களின் வாழ்வும் செயற்பாடுகளும் அல்குர்ஆனினது சட்டங்கள் மற்றும் அதன் போதனைகளுக்கான செயல்முறை வடிவங்களாகவே இருந்தன. எனவே, நபியவர்கள் அல் குர்ஆனின் வழிகாட்டலை முழுமையாகப் பின்பற்றிய சிறந்ததோர் உதாரணப் புருஷராக வாழ்ந்துள்ளார்கள்.  இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகினறான்: ″ ( உ ங் க ள ி ல் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூறுபவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது." (அல் அஹ்ஸாப் : 21)




முன்னைய வேதங்களில் காணப்படும் உள்ளடக்கங்கள் பற்றிய எமது நிலைப்பாடு யாது ?



மூஸா (அலை) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட தௌராத்தும் ஈஸா (அலை) அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட இன்ஜீலும் அல்லாஹ்விடமிருந்து வந்த உண்மையான வேதங்கள் என்றும் சட்டதிட்டங்கள், போதனைகள், மனிதனின் ஈருலக வாழ்விற்குமான ஒளிபொருந்திய வழிகாட்டல்களைக் கொண்ட செய்திகள் என்பனவற்றை அவ்விரண்டும் கொண்டிருக்கின்றன என்றும் ஒரு முஸ்லிம் நம்புகின்றான்.

எனினும், வேதக்காரர்களான யஹூதிகளும் கிறிஸ்தவர்களும் அவர்களது வேதங்களில் உள்ள சில விடயங்களைக் குறைத்தும் மற்றும் சில விடயங்களை கூட்டியும் திரிவுபடுத்தியும் விட்டதாக அல்லாஹ் அல்குர்ஆனில் எமக்கு கூறிக்காட்டுகின்றான்.

எனவே, அல்லாஹ் இறக்கியருளியது போன்று நம்பகமான நிலையில் அவைகள் தற்போது இல்லை.

இப்போது இருக்கின்ற இந்த தௌராதானது, நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட தௌராத் வேதம் அல்ல.

ஏனெனில், யஹுதிகள் அதனை திரிவுபடுத்தி விட்டனர்.

மேலும் அதன் பல்வேறு சட்ட திட்டங்களில் அவர்களின் திருவிளையாடலைக் காட்டிவிட்டனர். 

இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:

"யூதர்களில் சிலர், (வேத வசனங்களை அதற்குரிய இடங்களிலிருந்து (அவற்றின் கருத்து வேறுபடும்படியான விதத்தில்) புரட்டுகின்றனர்." (அந் நிஸா : 46)

இவ்வாறே, தற்போதுள்ள இன்ஜீலும் நபி ஈஸா (அலை) அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட இன்ஜீல் வேதம் அல்ல. இதனையும், இதன் பல்வேறு சட்டங்களையும் கிறிஸ்தவர்கள் மாற்றி திரிவுபடுத்தி விட்டனர்.

இக்கிறிஸ்தவர்கள் குறித்தே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் : "நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் அவர்கள் வேதத்தைக் கொண்டு (ஓதும்போது அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து) அதுவும் வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக்கொள்ளும் பொருட்டு தங்கள் நாவுகளைச் சாய்த்துக் கொள்கின்றனர் அது வேதத்தில் உள்ளதும் அல்ல. அன்றியும் அவர்கள், "அது அல்லாஹ்விடமிருந்துள்ளது" என்றும் கூறுகின்றனர் அது அல்லாஹ்விடமிருந்துள்ளதும் அல்ல. இன்னும் அவர்கள் நன்கறிந்தவர்களாக, அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யைக் கூறுகின்றனர்." (ஆலு இம்ரான் : 78)

மேலும், அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் "அன்றியும் தங்களை, "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்கள்" எனக் கூறுகின்றார்களே, அத்தகையோரிடமிருந்து அவர்களின் உறுதிமொழியை நாம் வாங்கியிருக்கின்றோம் (ஆனாலும்) அவர்கள் எதைக் கொண்டு உபதேசிக்கப்பட்டனரோ அதிலிருந்து ஒரு பாகத்தை (இந்நபியைப் பற்றி, தங்கள் வேதத்தில் தங்களுக்கு நினைவுபடுத்தப்பட்டதை) மறந்துவிட்டார்கள் ஆதலால், அவர்களிடையே விரோதத்தையும், குரோதத்தையும் மறுமைநாள் வரையில் (நீங்காதிருக்கும்படி) நாம் மூட்டிவிட்டோம் (இவ்வுலகில்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களென்பதையும் (மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குத் தெரிவிப்பான்." (அல் மாஇதா : 14)

இன்று பரிசுத்த வேதங்கள் என அழைக்கப்படும் வேதக்காரர்களின் கரங்களிலுள்ள தௌராத் மற்றும் இன்ஜீல் என்பன பிழையான பல்வேறு நம்பிக்கைகளையும், போலியான தகவல்களையும் உண்மைக்குப்புறம்பான கதைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன.

இந்த வேதங்களில் இடம்பெற்றுள்ள செய்திகளுள் எதனை அல்குர்ஆன் அல்லது தூய சுன்னா உண்மையெனக் குறிப்பிட்டிருக்கின்றதோ அதனை மாத்திரம் உண்மையென நாம் ஏற்றுக் கொள்வோம்.

இவற்றுள் அல்குர்ஆன் அல்லது ய சுன்னா எதனைப் பொய்யெனக் குறிப்பிட்டுள்ளதோ அதனை நாமும் பொய்யெனக் கூறுவோம்.

இவ்விரண்டு நிலைகளிலும் இல்லாத ஏனைய விடயங்களை நாம் உண்மைபடுத்தவோ பொய்யெனக் கூறவோ மாட்டோம்.

இவ்வாறான நிலையிலும் கூட, ஒரு முஸ்லிம் இந்த வேதங்களை மதிக்க வேண்டும்.இழிவு படுத்தவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது.

ஏனெனில் இவைகளில் திரிவுபடுத்தப்படாத நிலையில் அல்லாஹ்வின் சில வாசகங்கள் சிலவேளைகளில் இன்னும் அப்படியே இருக்கலாம்.

தௌராத்தும் இன்ஜீலும் அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டன. எனினும், அவைகளில் பல்வேறு மாற்றங்களும் திரிவுபடுத்தல்களும் இடம்பெற்றுள்ளன என்று ஒரு முஸ்லிம் நம்புகின்றார். எனவே, அவைகள் கொண்டிருக்கும் செய்திகளுள் எது அல் குர்ஆனுக்கும் அஸ் ஸூன்னாவிற்கும் உடன்படுகின்றதோ அதை மாத்திரமே அவர் நம்புவார்.


இறைவேதங்களை நம்புவதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள்


இறைவேதங்களை நம்புவதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் அதிகம் உண்டு. அவைகளுள் சில:

1

ஓவ்வொரு சமூகத்திற்கும் வேதங்களைக் கொடுத்து,அவர்களை நேர்வழிபடுத்தியுள்ளமை மற்றும் ஈருலகிலும் அவர்களுக்கு சுபீட்சமான வாழ்வை வழங்கி இருக்கின்றமை என்பன அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள நிறைவான அன்பையும் அவன் அவர்கள் மீது கொண்டுள்ள விஷேட கரிசனையும் எடுத்துக்காட்டுவதை உணர்த்துகின்றது.

2

அல்லாஹ் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது ஆளுமைகள் மற்றும் வாழ்வியல் சூழ்நிலைகள் என்பனவற்றுக்கு பொருத்தமான சட்டங்களை வழங்கி வழிகாட்டி இருப்பதன் மூலம் சட்டமியற்றுவதில் அவனுக்குள்ள ஆழ்ந்த புலமை இங்கு எடுத்துக் காட்டப்படுவதனை அறிந்து கொள்ளலாம். "உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஆக்கினோம். (அல் மாஇதா : 48)

3

ஈருலகிற்குமான ஒளிபொருந்தியதொரு வழிகாட்டலைக் கொண்டுள்ள இவ்வேதங்களை மனித இனத்திற்கு இறக்கி அருளியமைக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற உணர்வைப்பெற முடியும். எனவே, அல்லாஹ்வின் உயர்ந்த இந்த அருட்கொடையை பெற்றமைக்காக நாம் அந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது எமது கடமையாகும்.




இறைத்தூதர்களை நம்புதல்



மானிட சமூகத்திற்கான இறைத்தூதின் தேவை



இறைத் தூதானது, அல்லாஹ்வின் சட்டங்களைப் பற்றி மனிதர்களுக்கு புரியவைத்து, அவர்களை நேர்வழியின் பால் இட்டுச்செல்வதற்கான மிக முக்கியமானதோர் அம்சமாகும்.

இதுவே, உலகின் ஆத்ம சக்தியாகவும் ஒளியாகவும் உயிராகவும் திகழ்கின்றது. உலகின் உயிராகக் கருதப்படும் இந்த இறைத்தூதை இழந்த நிலையில் இப்பிரபஞ்சம் காணப்படுமானால், இது பயனற்ற வெறும் சட உலகாகத்தானே இருக்க வேண்டும்? எனவே தான், அல்லாஹ் இந்த தூதை உயிரென அழைக்கின்றான். உயிர் இல்லையேல் வாழ்வே இல்லாது போய்விடும்.

இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "(நபியே!) இவ்வாறே உமக்கு நம்முடைய கட்டளையில் (குர்ஆனாகிய) உயிரானதை வஹி மூலமாக அறிவிக்கின்றோம் (இதற்கு முன்னர்) நீர் வேதம் என்றால் என்ன, இன்னும் விசுவாசம் என்றால் என்ன என்பதை அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இவ்வேதத்தை உமக்கு வஹி மூலம் அறிவித்து) இதனைப் பிரகாசமாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் நாடியவர்களுக்கு இதனைக்கொண்டு நாம் நேர்வழி செலுத்துகின்றோம்." (அஷ் ஷுறா : 52)

பொதுவாகவே, எமது அறிவுத்திறனால் நல்லவற்றையும் தீயவற்றையும் வேறுபடுத்தி புரிந்து கொள்ள முடியுமாக இருந்தாலும் கூட அவைகளை முழுமையாகவும் விரிவாகவும் விளங்கிக் கொள்ளவோ, வணக்க வழிபாடுகள் மற்றும் அவைகளுக்கான முறைகளைப் பற்றி புரிந்து கொள்ளவோ முடியாது.

வஹி மற்றும் இறைத்தூது எனும் வழிமுறையினூடாக மாத்திரமே இவைகளை அறிந்து கொள்ள முடியும்.

எனவே,இறைத்தூதர்களின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலமே ஈருலகிலும் வெற்றியையும் சந்தோஷத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

நல்லதையும் கெட்டதையும் மிக நுணுக்கமாக புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய வழிமுறையைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த இறைத்தூதை யாராவது புறக்கணித்து நடந்தால், அவர்கள் அதனைப் புறக்கணிக்குமளவு அவர்களது வாழ்வில் கவலையும் திண்டாட்டமும் துரதிஷ்ட நிலையும் ஏற்படும்.

இறைத் தூதுதான் இவ்வுலகின் ஆன்மாவாகவும் அதன் ஒளியாகவும் காணப்படுகின்றது.



இது ஈமானின் தூண்களுள் ஒன்றாகும் :



இறைத்தூதை நம்புவதானது, ஈமானின் ஆறு தூண்களுள் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகின்றான் : "(நம்முடைய) தூதர், தம் இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கிவைக்கப்பட்ட (வேதத்) தை விசுவாசிக்கின்றார். (அவ்வாறே மற்ற) விசுவாசிகளும் (விசுவாசிக்கின்றனர் இவர்கள்) ஒவ்வொருவரும், அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றனர் "அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமைப்படுத்திவிடமாட்டோம்" (என்றும்,) கூறுகின்றார்கள்."(அல் பகறா : 285)

இறைத்தூதர்கள் அனைவரையும் எதுவித வித்தியாச வேறுபாடுகளும் இன்றி நாம் கட்டாயம் நம்ப வேண்டுமென இந்த வசனம் எடுத்துக் கூறுகின்றது. எனவே, நாம் யஹூதிகளையும் கிறிஸ்தவர்களையும் போன்று இறைத்தூ தர்களுள் சிலரை நம்பி ஈமான் கொண்டு மற்றும் சிலரை நிராகரிக்க மாட்டோம்.  நபியவர்கள் ஈமானைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்கள். "அல்லாஹ், அவனது மலக்குகள், வேதங்கள், தூதர்கள் மற்றும் மறுமை நாள், நல்லது கெட்டது உள்ளிட்ட அவனது விதி என்பவற்றை நீ நம்புவதாகும்." (முஸ்லிம் : 8)





"இறைத்தூதர்களை நம்புவது" என்பதன் பொருள் :



ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்தந்த சமூகத்திலிருந்தே இறைத்தூதர் ஒருவரை அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

அல்லாஹ்விற்கு இணைவைக்காத நிலையில் அவனை மாத்திரமே வணங்க வேண்டுமென்று அந்த சமூகத்தவர்களை நோக்கி அவர்கள் அழைப்புக் கொடுத்தனர்.

அவர்கள் அனைவரும் உண்மையாளர்களாகவும் இறையச்சமுள்ள நம்பிக்கையாளர்களாகவும் நேர்வழி பெற்ற வழிகாட்டிகளாகவும் இருந்ததோடு, அவர்க ளுக்கு அல்லாஹ் கொடுத்த அவனின் இறைத்தூதை மாற்றாமலும் கூட்டாமலும் குறைக்காமலும் முழுமையாக மக்களுக்குப் போதித்தனர் என்பது போன்ற மேற்படி அம்சங்களை உறுதியாக நம்புவதையே இது குறிக்கின்றது.

இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் : "(நம் தூதைத்) தெளிவாக எத்திவைப்பதைத் தவிர (வேறு எதுவும் நம்) தூதர்களின் மீது உண்டா ?" (அந் நஹ்ல் : 35)






"இறைத்தூதர்களை நம்புதல்" எனும் அம்சம் எவ்வாறான விடயங்களை உள்ளடக்கியுள்ளது ?



1

அவர்களின் இறைத்தூ துகள் உண்மையாகவே அல்லாஹ்விடமிருந்து வந்தவைகள் என்றும் "அல்லாஹ்விற்கு இணைவைக்காது, அவன் ஒருவனையே வணங்கவேண்டும்" என்ற ஒரே விடயத்தினையே ஏகமனதாக அவர்களது தூதுகள் அனைத்தும் முன்வைத்தன என்றும் நம்புதல்.

அல்லாஹ் கூறுகின்றான்: "ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கின்றோம் (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்,) அல்லாஹ்வையே வணங்குங்கள் (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்." (அந் நஹ்ல் : 36)
ஹலால், ஹராம் போன்ற கிளை அம்சங்கள் தொடர்பாக நபிமார்கள் முன்வைத்த சட்டங்கள் சமூகத்திற்குச் சமூகம் வேறுபட்டே இருந்தன. எனினும், அவைகள் அந்தந்த சமூகத்தைச் சாா் ந்தமக்களுக் குப் பொருத்தமானவைகளாகவே காணப்பட்டன. இதனையே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் : "உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஆக்கினோம்." (அல் மாஇதா : 48)

2

அனைத்து இறைத்தூதர்களையும் நபிமார்களையும் நம்புதல். அல்லாஹ் பெயர் குறித்துக் கூறிய நபிமார்களை நாம் நம்புவோம். உதாரணமாக, முஹம்மத், இப்றாஹீம், மூஸா, ஈஸா (அலை) ஆகியோரைக் குறிப்பிடலாம். அவ்வாறே, அவர்களுள் பெயர் குறிப்பிடப்படாதவர்களையும் பொதுவாகவே நாம் நம்பவேண்டும். அவர்களுள் ஒருவரினது இறைத்தூ தை ஒருவர் நிராகரித்தாற் கூட, அவர் அனைத்து நபிமார்களையும் நிராகரித்தவர் போன்றாவார்.

3

அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள இறைத்தூதர்கள் தொடர்பான நம்பகமான செய்திகள் மற்றும் அவர்களது அற்புதங்களை நம்புதல். உதாரணமாக, மூஸ ா (அலை) அவர்கள் கடலைப் பிளந்து பயணித்த கதையைக் குறிப்பிடலாம்.

4

எமக்குத் தூதராக அனுப்பப்பட்டவரும் நபிமார்களுள் சிறந்தவரும் இறுதியானவருமான முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட சட்டதிட்டங்களுக்கு ஏற்ப செயற்படல்.


இறைத்தூதர்களின் நற்பண்புகள்
1

அவர்களும் மனிதர்களே.

ஆனால்,வஹியைப்பெறுவதற்காகவும்,அவனது இறைத்தூதைச் சுமந்து சென்று, போதனை செய்வதற்காகவும் அல்லாஹ் அவர்களை விஷேடமாக தெரிவுசெய்திருப்பதானது,அவர்களுக்கும் ஏனையோருக்குமிடையிலான பிரதான வேறுபாடாகக் கொள்ளப்படுகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான் :

"மேலும், (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களிலிருந்து) ஆடவர்களையே அன்றி, வேறெவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை (உமக்கு அறிவிக்கிற பிரகாரமே) அவர்களுக்கும் நாம் வஹி அறிவித்தோம்." (அல் அன்பியா: 7)

எனவே, அவர்களுக்கு எந்தவொரு தெய்வீகப் பண்புகளும் கிடையாது. ஏனெனில், அவர்கள் வெளித்தோற்றத்திலும் குண இயல்புகளிலும் முழுமை பெற்ற மனிதர்களாவர். மேலும், அவர்கள் மனிதர்களுள் மிகச் சிறந்தவர்களாய் இருந்ததோடு, இறைத்தூது எனும் பொறுப்பை சுமப்பதற்கும் நபித்துவத்தின் சுமைகளை சகித்துக் கொள்வதற்கும் தேவையான தகைமைகள் எனக் கருதப்படும் சிறந்த அறிவாற்றலும் தெளிந்த நாவன்மையும் அவர்களுக்கு இருந்தன.

இறைத்தூதர்கள் மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ வேண்டுமென்பதற்காக அவர்களை மனித இனத்திலிருந்தே அல்லாஹ் தெரிவுசெய்தான்.

எனவே தான், மக்களுக்கு இறைத்தூதர்களைப் பின்பற்றுவது மிகச் சுலபமானதொரு விடயமாக இருந்தது.

2

வஹி மற்றும் இறைத்தூது என்பவற்றுக்காக, ஏனைய மனிதர்களை விட இவர்களை அல்லாஹ் விஷேடமாக தெரிவு செய்திருக்கின்றான்.

இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான:

"(நபியே!) நீர் கூறுவீராக : "நிச்சயமாக, நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் நிச்சயமாக உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹி மூலம் அறிவிக்கப்படுகிறது." (அல் கஹ்ப்:110)

எனவே, இறைத்தூதும் நபித்துவமும் மனித அறிவினாலோ, தூய்மையான ஆன்மீகப் பலத்தினாலோ அல்லது அறிவுசார்ந்த தத்துவத்தினாலோ பெறப்பட முடியாது.

உண்மையாகவே, இவைகள் இறைவிருப்பம் எனும் விஷேட தெரிவின் மூலமே பெற முடியும்.

மனிதர்களிலிருந்து அல்லாஹ், தான் விரும்பியோரை மாத்திரமே இறைத்தூதர்களாக தேர்வு செய்கின்றான்.

இதனையே அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் :

"அல்லாஹ் தன்னுடைய தூதுத்துவத்தை எங்கு (எவருக்கு) ஆக்குவது என்பதை மிக்க அறிந்தவன்." (அல் அன்ஆம் : 124)

3 அவர்கள் பாவம் செய்வதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். இறைத்தூதை மக்களுக்கு போதிக்கின்ற போதோ அல்லது அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற போதோ அவர்கள் தவறுகள் இழைக்கமாட்டார்கள்.
4

உண்மை:

இறைத்தூதர்கள் பேசுகின்ற போதும் செயலாற்றுகின்ற போதும் உண்மையாகவே நடந்து கொள்வர்.

இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான் :

(அதற்கு மலக்குகள் அவர்களிடம்)" அர்ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், தூதர்கள் (உங்களுக்கு) உண்மை (என எடுத்துக்) கூறியதும் இது தான்" (என்று கூறுவார்கள்). (யாசீன் : 52)

5

பொறுமை:

எச்சரித்தும் சுபச் செய்திகள் கூறியும் அல்லாஹ்வினது மார்க்கத்தின் பால் மனிதர்களை இறைத்தூதர்கள் அழைத்தனர்.

இதன் போது இவர்கள் பல்வேறு வகையான துன்ப துயரங்களுக்குஆளாகினர்.

அல்லாஹ்வின் திருக்கலிமா மேலோங்க வேண்டுமென்பதற்காக இறைத்தூதர்கள் இவைகளை சகித்துக் கொண்டதோடு பொறுமையாகவும் இருந்தனர்.

அல்லாஹ் கூறுகின்றான் :

"(நபியே! நம்முடைய) தூதர்களிலுள்ள உறுதிமிக்கவர்கள், (கஷ்டங்களை) பொறுத்துக்கொண்டிருந்த பிரகாரமே, நீரும் பொறுமையாக இருப்பீராக!" (அல் அஹ்காப் : 35)



இறைத்தூதர்களின் அடையாளங்களும் அற்புதங்களும்:



இறைத்தூதர்களையும் அவர்களது நபித்துவத்தையும் உண்மையென நிரூபிப்பதற்குத் தேவையான பல்வேறு அத்தாட்சிகளை வழங்கியதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றான்.

மனித சக்திக்கு உட்படாத வெளிப்படையான அற்புதங்கள் மற்றும் அத்தாட்சிகள் மூலம் இறைத்தூதர்களின் நபித்துவத்தை உண்மைப்படுத்தி உதவி செய்திருக்கின்றமையானது, இந்த வகையையே சாரும்.

அற்புதங்கள் என்பதன் பொருள் : மனிதனால் மேற்கொள்ள முடியாத, இயற்கைக்கு முரணான அம்சங்களையே இவைகள் குறிக்கும். தனது இறைத்தூதர்கள் மற்றும் நபிமார்களின் மூலமே இவைகளை அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான்.

சில அற்புதங்கள் :

  • மூஸா (அலை) அவர்களின் கைத்தடி பாம்பாக மாற்றப்பட்டமை.
  • ஈஸா (அலை) அவர்கள் தனது சமூகத்திற்கு அவர்கள் சாப்பிட்டவைகள் மற்றும் வீட்டிலே சேகரித்து வைத்துள்ள பொருட்கள் போன்றவற்றினை அறியப்படுத்தியமை.
  • முஹம்மத் (ஸல்) அவர்கள் சந்திரனைப் பிளந்து காட்டியமை.



ஈஸா (அலை) அவர்கள் பற்றிய ஒரு முஸ்லிமின் கொள்கை



1

அல்லாஹ்வின் மிக உயர்ந்த இறைத்தூ தராகவும் "உலுல் அஸ்ம" எனப்படும் திட உறுதிமிக்க நபிமார்களுள் ஒருவராகவும் இவர் இருக்கின்றார். முஹம்மத், இப்ராஹீம்,நூஹ், மூஸா, ஈஸா (அலை) ஆகிய இறைத்தூ தர்களே "உலுல் அஸ்ம்" களாவர். இவர்களைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்: மேலும் நபிமார்களிடமிருந்தும் உம்மிடமிருந்தும், நூஹிடமிருந்தும் இன்னும், இப்றாஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரிடமிருந்தும் அவர்களின் உறுதிமொழியை நாம் எடுத்த சமயத்தில் அவர்களிடமிருந்து மிக்க உறுதியான உறுதிமொழியையே நாம் எடுத்தோம் (என்பதை இவர்களுக்கு நினைவு படுத்துவீராக!) (அல் அஹ்ஸாப்: 7)

2

எந்தவொரு தெய்வீகப் பண்புகளுமற்ற மிக உயர்ந்ததொரு மனிதரே இவர். அல்லாஹ் இவரை "பனூ  இஸ்ராயீல்" சமூகத்திற்கு இறைத்தூ தராக அனுப்பிவைத்து, பல்வேறு அற்புதங்களைக் கொடுத்து இவருக்கு உதவினான். இதனை அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: (ஈஸாவாகிய) அவர், (நம்முடைய) அடியாரே அன்றி (அவர் தெய்வம்) இல்லை; அவர் மீது நாம் அருள் புரிந்து, இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதரணமாக்கினோம். (அஸ் ஸுஹ்ருப்: 59)

அல்லாஹ்வை விடுத்து தன்னையோ தனது தாயையோ கடவுள்களாக எடுத்துக் கொள்ளுமாறு ஈஸா (அலை) அவர்கள் தனது சமூகத்தை நோக்கி ஒருபோதும் உத்தரவிடவில்லை. மாறாக, அல்லாஹ் அவருக்கு ஏவிய விடயங்களைச் செய்யுமாறு மாத்திரமே அவர்களைப் பணித்தார். அல்லாஹ் கூறுகின்றான்: "என்னுடைய இரட்சகனும், உங்களுடைய இரட்சகனுமான அல்லாஹ்வை வணங்குங்கள்" (அல் மாஇதா : 117)

3

இவர், மர்யம் (அலை) அவர்களின் மகனாவார். இவருடைய தாய் மர்யம் (அலை) அவர்கள் தூய்மையானவர், வாய்மைமிக்கவர், தனது இறைவனை வணங்கி வழிபடுகின்ற பேணுதலுடையவர். மேலும், ஈஸா (அலை) அவர்களை தந்தையின்றி அல்லாஹ்வினது அற்புதத்தின் மூலம் தனது கற்பத்தில் சுமந்து பெற்றெடுத்தவர். தாயும் தந்தையுமின்றி ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்தது போன்று ஈஸா (அலை) அவர்களையும் அவனது நிலையானதோர் அற்புதத்தின் மூலம் படைத்தான். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: நிச்சயமாக, அல்லாஹ்விடம் ஈஸ வுக்கு உதாரணம்: ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன், அவரை மண்ணால் படைத்துப்பின் அதற்கு (மனிதனாக) "ஆகுக" என்று கூறினான்; அவர் (அவ்வாறு) ஆகிவிட்டார். (ஆலு இம்ரான் : 59)

4

இவருக்கும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குமிடையில் எந்தவொரு இறைத்தூதரும் வரவில்லை. இவருக்குப் பின்னர், முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக வருவார்களென்ற சுப செய்தியை ஈஸா (அலை) அவர்கள் முன்னறிவிப்புச்செய்தார்கள். இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: மேலும் மர்யமின் புதல்வர் ஈஸா "இஸ்ராயீலின் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தியவனாகவும், எனக்கு பின்னர் அஹ்மது எனும் பெயருள்ள ஒரு தூதர் வருவார் என நன்மாராயம் கூறுபவனாகவும் நிச்சயமாக உங்கள்பால் (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராக நான் இருக்கிறேன்" என்று கூறியதை (நபியே நீர் நினைவு கூருவீராக) பின்னர், (அவர் கூறியவாறு) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் (அத்தூதராகிய) அவர் வந்த பொழுது, இது தெளிவான சூனியம்" என்று அவர்கள் கூறினர். (அஸ் ஸப் : 6)

5

அல்லாஹ்வுடைய உத்தரவிற்கிணங்க இவர் மேற்கொண்ட அற்புதங்களை நாங்கள் நம்புகின்றோம். உதாரணமாக, குஷ்டரோகிகள் மற்றும் பிறவிக்குருடர்களைக் குணப்படுத்தியமை, இறந்தவர்களை உயிர் கொடுத்து எழுப்பியமை, மனிதர்கள் சாப்பிட்டவைகள் மற்றும் அவர்களது வீடுகளில் சேகரித்து வைத்த பொருட்களைப் பற்றிக் கூறியமை போன்றவைகளைக் குறிப்பிடலாம். இவைகள் அனைத்தும் அல்லாஹ்வின் உத்தரவிற்கிணங்கவே செய்யப்பட்டன. இவருடைய தூதையும் நபித்துவத்தையும் உண்மைப்படுத்துவதற்கான தெளிவான சான்றுகளாகவே அல்லாஹ் இந்த அற்புதங்களை ஆக்கியுள்ளான்.

6

ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவன் தூதரும் என்று ஒருவர் நம்பாவிட்டால், அவரின் ஈமான் முழுமை அடையாது. இவர் தொடர்பாக, யஹூதிகள் கொண்டிருக்கும் பிழையானதும் மிக மோசமானதுமான கருத்துக்களை முழுமையாக நிராகரிக்க வேண்டும். அவ்வாறே, ஈஸா (அலை) அவர்களின் யதார்த்த நிலை பற்றி தவறாகப் புரிந்துகொண்ட கிறிஸ்தவர்களின் கொள்கையையும் நாம் புறக்கணிக்க வேண்டும்.
இவர் தொடர்பான கிறிஸ்தவர்களின் பிழையான கொள்கைகள்:
⚫︎ அல்லாஹ்வை விடுத்து, இவரையும் இவரது தாயையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டமை.
⚫︎ சிலர், இவர் "அல்லாஹ்வின் குமாரர்" என்று கூறுகின்றமை.
⚫︎ சிலர், "திருத்துவக் கொள்கையான" மூன்று கடவுள்களுள் இவர் மூன்றாமவர் என்று நம்புகின்றமை.
இவர்கள் கூறும் இப்பிழையான கருத்துக்களை விட்டு அல்லாஹ் மிக உயர்ந்தவன்.

7

இவர் கொலைசெய்யப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லை. மாறாக, இவர் அல்லாஹ்வால் விண்ணுலகிற்கு உயர்த்தப்பப்பட்டார். யஹூதிகள் இவரை கொலை செய்ய எண்ணிய போது, வேறொருவனை இவர் போன்று அல்லாஹ் மாற்றிவிட்டான். இவனையே இவர்கள் கொலை செய்து, சிலுவையில் அறைந்துவிட்டு, இவன் தான் ஈஸா (அலை) அவர்கள் என்று பிழையாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: இன்னும் "அல்லாஹ்வுடைய தூதர் மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை, நிச்சயமாக நாங்கள் கொலை செய்து விட்டோம்", என்று அவர்கள் கூறியதன் காரணமாகவும் (அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான்) அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை; எனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவனை ஒப்பா (க்கி காண்பிக்) கப்பட்டது. இன்னும் நிச்சயமாக இ(வ்விஷயத்)தில், கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றார்களே அத்தகையோர், அது பற்றி சந்தேகத்திலேயே உள்ளனர்; வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர, அதில் அவர்களுக்கு உண்மையான அறிவு (ஆதாரம்) கிடையாது; மேலும், உறுதியாக அவர்கள் அவரை கொலை செய்யவே இல்லை. மாறாக, அல்லாஹ் அவரைத்தான் அளவில் உயர்த்திக் கொண்டான்; இன்னும் அல்லாஹ் (யாரையும்) மிகைத்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். வேதத்தையுடையவர்களிலிருந்து எவரும் அவர் இருப்பதற்கு முன்னதாக, திட்டமாக அவரை விசுவாசிக்காமல் இருப்பதில்லை; இன்னும், மறுமை நாளில், அவர்களுக்கு அவர் பாதகமான சாட்சியாளனாக இருப்பார். (அந் நிஸா : 157 -159)

இந்த வகையில், அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களைப் பாதுகாத்து வானத்திற்கு உயர்த்திக் கொண்டான். உலக முடிவின் போது இவர் பூமிக்கு இறங்கி, நபி (ஸல்) அவர்களது மார்க்கச் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி செய்வார். பின்னர் இப்பூமியிலேயே இறந்து இங்கேயே அடக்கம் செய்யப்படுவார். இறுதியில், இவரும் ஏனையோரைப் போன்று இப்பூமியிலிருந்தே எழுப்பப்படுவார் அல்லாஹ் கூறுகின்றான்: (பூமியாகிய) அதிலிருந்தே நாம் உங்களைப் படைத்தோம்; பின்னர், அதிலேயே நாம் உங்களை மீளவைப்போம்; மற்றொரு தடவையும் (உங்களுக்கு உயிர் கொடுத்து) அதிலிருந்தே நாம் உங்களை வெளிப்படுத்துவோம்" (என்று அவனுக்குக் கூறும்படிச் செய்தோம்). (தாஹா : 55)

ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மிக உயர்ந்த இறைத்தூதர்களுள் ஒருவர். எனினும், அவருக்கு எந்தவொரு தெய்வீகப் பண்புகளும் கிடையாது. மேலும், அவர் கொலை செய்யப்படவோ சிலுவையில் அறையப்படவோ இல்லை என்றே ஒரு முஸ்லிம் நம்புவார்.




நபி (ஸல்) அவர்களை ஒரு நபியபாகவும் இறைத்தூதராகவும் நம்புதல்



  • முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் இறைத்தூதருமாவார். முழு மனித குலத்திற்கும் இவரே தலைவர். நபிமார்களுள் இறுதியானவர். எனவே இவருக்குப் பின்னர் எந்தவொரு நபியும் வரமாட்டார். மேலும், இவர் இறைத்தூதை எடுத்துரைத்து, தனது பொறுப்பை நிறைவேற்றியதோடு, இந்த சமூகத்திற்கு உபதேசித்து அல்லாஹ்வின் பாதையில் உண்மையாகவே போராடியவர் என்பன போன்ற இவர் தொடர்பான பல்வேறு அம்சங்களை நாங்கள் நம்புகின்றோம்.
  • இவர் கூறிய விடயங்களை நாங்கள் உண்மையென நம்புகின்றோம். இவரது உத்தரவுகளுக்கு கட்டுப்படுவதோடு, எச்சரித்து தடுத்த விடயங்களை தவிர்த்துக் கொள்கின்றோம். இவரது "ஸு ன்னா" எனும் வழிகாட்டலுக்கேற்பவே அல்லாஹ்வை வணங்குகின்றோம். இவரை மாத்திரமே எமது முன்மாதிரியாகக் கொண்டிருக்கின்றோம். அல்லாஹ் கூறுகின்றான்: (உங்களில்) அல்லாஹ்வையும், மறுமை நளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூறுபவராக இருப்பவருக்கு, அல்லாஹ்வின் தூதரில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் அஹ்ஸாப் : 21)
  • எமது பெற்றோர்கள், பிள்ளைகள், முழு மனிதர்களை விடவும் நபி (ஸல்) அவர்களை நாம் நேசித்தல் வேண்டும். இதைப் பற்றி நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்: உங்களுள் ஒருவருக்கு நான் அவரது தந்தை, பிள்ளை,மக்கள் அனைவரை விடவும் அதிக நேசத்திற்குரியவனாய் மாறாத வரையில் அவர் உண்மை விசுவாசியாக மாட்டார் (அல் புகாரி : 15, முஸ்லிம் : 44) நபியவர்களை நேசிப்பதற்கான உண்மையான அடையாளம் அவரது "ஸு ன்னா" எனும் அழகிய வழிகாட்டலைப் பின்பற்றுவதாகும். உண்மையான சந்தோஷத்தையும் முழுமையான வழிகாட்டலையும் நபியவர்களுக்கு கட்டுப்படுவதன் மூலமே அடையப்பெற முடியும். இதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: மேலும், நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர் வழியை அடைந்து விடுவீர்கள்; (நம் தூதைத்) தெளிவாக எத்திவைப்பதைத் தவிர, (வேறோன்றும் நம்) தூதர் மீது (கடமை) இல்லை. (அந் நூர் : 54) 
  • அல்லாஹ்விடமிருந்து நபியவர்கள் கொண்டுவந்த அனைத்து விடயங்களையும் நாம் ஏற்றுக்கொள்வதோடு, அவரது ஸுன்னாவையும் பின்பற்றி நடத்தல் வேண்டும். மேலும், அவரது வழிகாட்டலை உயர் இடத்தில் வைத்து நோக்குதல் வேண்டும். இதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்: ஆனால், உமதிரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத வரையில், அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள் (அந் நிஸா : 65)
  • இவருடைய கட்டளைகளுக்கு மாறுசெய்யாது நாம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். fஏனெனில், இவரது உத்தரவிற்கு கட்டுப்படாது நடப்பதானது பிரச்சினைகள், வழிகேடுகள் மற்றும் கடுமையான தண்டனைகள் என்பன கிடைப்பதற்குக் காரணமாக அமைந்துவிடும். அல்லாஹ் கூறுகின்றான்: ஆகவே, (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே அத்தகையவர்கள், (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்து விடுவதையோ அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும். (அந் நூ ர் : 63)



முஹம்மத் (ஸல்) அவர்களது இறைத்தூ தின் சிறப்பம்சங்கள்


முஹம்மத் (ஸல்) அவர்களுக்கான இறைத்தூதானது, முன்னைய இறைத்தூ துகள் கொண்டிராத பல்வேறு தனித்துவங்களையும் சிறப்பியல்புகளையும் கொண்டிருக்கின்றது. அவைகளுள் சில பின்வருமாறு:

  • இறைத்தூதுகளுள் இறுதியானது. அல்லாஹ் கூறுகின்றான்: உங்களுடைய ஆண்களில் எவருக்கும் முஹம்மது, தகப்பனாக இருக்கவில்லை; எனினும், அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு(க் கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார்;(அல் அஹ்ஸாப் : 40)
  • முன்னைய இறைத்தூதுகள் அனைத்தையும் இரத்துச் செய்துவிட்டது. எனவே, நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்ததன் பின்னர் அவரது வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலமே சுவன இன்பத்தை ஒருவரால் பெற முடியும். இவர் இறைத்தூதர்களுள் மிக கெளரவமானவர். இவரது சமூகமே மானிடச் சமூகங்களுள் மிகச் சிறந்த சமூகம் இறைசட்டங்களுள் இவர் கொண்டு வந்த சட்டங்களே முழுமை பெற்றவை. அல்லாஹ் குறிப்பிடுகின்றான்: "இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது; மேலும் மறுமையில், அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்". (ஆலு இம்ரான்: 85) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக இந்த சமுதாயத்திலுள்ள யூதனோ அல்லது கிறிஸ்தவனோ யாராக இருப்பினும் அவன் என்னைப் பற்றி கேள்விப்பட்டு, எனக்கு வழங்கப்பட்ட இறைத் தூதினை நம்பாத நிலையில் மரணித்து விட்டால், நரகவாதிகளுள் ஒருவனாக அவன் மாறிவிடுகின்றான் (முஸ்லிம் : 153, அஹ்மத் : 8609)
  • ஜின் மற்றும் மனித சமூகங்களுக்குப் பொதுவானது. இஸ்லாத்தை தழுவிய சில ஜின்கள் தெரிவித்த சில கருத்துக்களைப் பற்றி விபரிக்கின்ற போது அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான். எங்களுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு நீங்கள் பதில் கூறுங்கள்; (அல் அஹ்காப் : 31) மேலும் கூறுகின்றான் மேலும், (நபியே!) உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நன்மாராயம் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி நாம் அனுப்பவில்லை. (ஸபஃ : 28) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்வரும் ஆறு விடங்கள் எனக்கு வழங்கபட்டதன் மூலம் ஏனைய நபிமார்களை விட நான் கெளரவிக்கப்பட்டுள்ளேன்.
    ● சொற்சுருக்கமும் கருத்துச்செறிவும் கொண்ட பேச்சுத்திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளமை.
    ● (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்) அச்சத்தின் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளமை.
    ● போரில் கைப்பற்றப்படும் எதிரிகளின் பொருட்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளமை.
    ● பூமி முழுவதும் எனக்காக சுத்தமானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளமை.
    ● சகல படைப்பினங்களுக்கும் நான் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளமை.
    ● நபிமார்களின் வருகை என்னுடன் முற்றுப்பெற்றுள்ளமை.   (அல் புகாரி : 2815, முஸ்லிம் : 523)
     


இறைத்தூதர்களை நம்புவதன் மூலம் அடையப்பெறும் நன்மைகள்


இறைத்தூதர்களை நம்புவதன் மூலம் அடையப்பெறும் நன்மைகள்:

1

அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் கரிசனையையும் புரிந்து கொள்ள முடியும். அல்லாஹ் தனது அடியார்களுக்கு நேர்வழியைக் காட்டுவதற்காகவும் அவர்கள் அவனை எவ்வாறு வணங்க வேண்டுமென்பதை தெளிவுபடுத்துவதற்காகவும் இறைத்தூதர்களை அவர்கள் பால் அனுப்பி வைத்தான்.  ஏனெனில், மேற்படி அம்சங்களை மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாது. அல்லாஹ் நபியவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றான்: (நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை. (அல் அன்பியா: 107)

2

இப்பெரும் அருட்கொடையை அல்லாஹ் வழங்கியமைக்காக அவனுக்கு நன்றி செலுத்துதல்.

3

இறைத்தூதர்கள் தங்களது சமூகத்திற்கு அல்லாஹ்வின் தூதை பிரச்சாரம் செய்து,மக்களை நல்வழிப்படுத்தியதற்காக (உபதேசித்ததற்காக) அவர்களைப் புகழ்வதோடு, உயர்வாக மதித்து அவர்கள் மீது அன்பு கொள்ளுதல்.

4

இறைத்தூதர்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்த இறைத்தூதான "அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் அவன் ஒருவனையே வணங்குதல் வேண்டும்" எனும் மூல மந்திரத்தை பின்பற்றுவதோடு அவற்றை நடைமுறைப்படுத்தல்.

இது ஈருலகிலும் நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியையும் நேர்வழியையும் பெற்றுக் கொடுக்கும்.அல்லாஹ் கூறுகின்றான்: ஆகவே, என்னுடைய நேர்வழியை எவர் பின்பற்றுவாரோ, அவர் வழி தவறமாட்டார்; துர்பாக்கியவனாக ஆகவுமாட்டார்" என்று கூறினான். மேலும், "எவர் என்னுடைய நல்லுபதேசத்தைப் புறக்கணிக்கின்றாரோ, நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது. (தாஹா : 123 124)


"மஸ்ஜிதுல் அக்ஸா" விற்கு, முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. இது "மஸ்ஜிதுல் ஹராம்" எனும் பள்ளிவாயிலுக்குப் பின்னர் பூமியில் கட்டப்பட்ட இரண்டாவது பள்ளியாகும். இப்பள்ளிவாயிலில் நபி (ஸல்) அவர்கள் உள்ளிட்ட அனைத்து நபிமார்களும் தொழுதிருக்கின்றார்கள்.


Belief in the Last Day



Meaning of Belief in the Last Day



Firm belief that Almighty Allah will raise people to life from their graves; He will then judge them according to their deeds. Those who deserve to go to Paradise will be sent to it, while those who deserve to go to Hellfire will be sent to it.

Belief in the last Day is one of the articles of faith, and faith will not be valid unless one believes in the Last Day, as the Qur’an states, “Truly pious are those who believe in Allah and the Last Day.” (Soorat Al-Baqarah, 2:177)



Why Does the Qur’an Emphasise Belief in the Last Day?



The Qur’an emphasises belief in the last Day and draws attention to it on numerous occasions, employing different modes of expression in Arabic and linking belief in the Last Day with belief in Allah.

The reason for this is that belief in the Last Day is a necessary outcome of belief in Almighty Allah and His absolute justice. To illustrate:

Allah does not approve of injustice; He will not let the wrongdoers go unpunished, nor will He let the wronged down by not having them obtaining redress for the wrong done to them, nor will He disappoint the virtuous by not rewarding them for their righteousness. Many are those who spent all their lives oppressing others with impunity until they died; many are those who suffered a great deal of injustice and died without ever obtaining redress for the wrong done to them. This means there has to be another life, other than the present life, where the righteous will be rewarded and the evildoers will be punished, everyone getting the reward or punishment they deserve.

Islam teaches us to save ourselves from Hellfire by showing kindness to others even by giving half of a date-fruit in charity.



What Does Belief in the Last Day Include?



Belief in the Last Day includes a number of things, some of which are as follow: 

1

Belief in the Ultimate Resurrection and Gathering: This means that Almighty Allah will raise people to life from their graves, and each soul will return to its respective body. People will then stand before the Lord of all the worlds for judgement. They will be gathered on a huge level plain, naked and barefooted just as Allah ﷻ first created them.

Indeed, belief in the resurrection of the dead is confirmed by textual evidence from the Qur’an and the Sunnah and has been proven rationally as well as through the inner nature (fitrah). We therefore firmly believe that Allah will raise the dead from their graves, their souls will return to their respective bodies and all people will stand before the Lord of the worlds for judgement.

The Qur’an says, “Then subsequently you will certainly die. Then on the Day of Rising you will be raised again.” (Soorat Al-Mu’minoon, 23:15-16)

All divine books have confirmed this fact, stating that part of Allah’s wisdom behind creating people is to set an ultimate day on which He will judge them for obeying or rejecting His commands which he sent down to them through His messengers, as the Qur’an states, “Did you suppose that We created you for amusement and that you would not return to Us?’” (Soorat Al-Mu’minoon, 23:115)


Some Textual Evidence from the Qur’an Regarding Resurrection

  • It was Allah ﷻ who created mankind the first time, and He is able to bring them back to life, as the Qur’an states, “And it is He who originates creation, then brings it back again, and it is easier for Him.” (Soorat Ar-Room, 30:27) Refuting the false claim that it is impossible for bones to be restored to life when they are decayed, Almighty Allah says, “Say, ‘He who made them in the first place will bring them back to life.’” (Soorat Yaa Seen, 36:79)
  • When the earth is barren and lifeless, Allah pours rain down upon it, and it stirs and swells and brings forth every kind of lovely plant. The One who can bring it to life is certainly able to bring the dead back to life, as the Qur’an states, “And We sent down blessed water from the sky and made gardens grow by it and grain for harvesting, and tall palm-trees with their thickly-clustered dates, as provision for Our slaves; by it We brought a dead land to life. Thus will be the resurrection.” (Soorat Qaaf, 50:9-11)
  • Every sensible person admits that if someone can do something hard, then he can, with all the more reason, do something easier than that. Therefore, if Almighty Allah was able to create the wonderful heavens, the vast earth and all the mighty stars, then He can, with all the more reason, easily bring bones that have decayed, back to life, as the Qur’an states, “Does He who created the heavens and earth not have the power to create [from rotten bones] the like of them again? Yes indeed! He is the Creator, the AllKnowing.” (Soorat Yaa Seen, 36:81)



2

Belief in the Judgement and the Balance of Deeds: Almighty Allah will judge people according to their deeds which they did in the life of the world. Those who worship Allah alone and obey Him and His Messenger Muhammad ﷺ will receive an easy reckoning. As for those who commit the unforgivable sin of shirk and disobey Him, they will receive a severe reckoning.

People’s deeds will be weighed in a huge balance. The good deeds will be placed on one weighing pan, while the bad deeds will be placed on the pan at the other end of the Balance. Those whose good deeds outweigh their bad deeds will be admitted into Paradise, while those whose bad deeds outweigh their good deeds will be sent to Hellfire, and Allah does not wrong anyone.

Allah ﷻ say, “We will set up the Just Balance on the Day of Rising and no one will be wronged in any way. Even if it is no more than the weight of a grain of mustardseed, We will produce it. We are sufficient as a Reckoner.” (Soorat Al-Anbiyyaa’, 21:47)

3

Paradise and Hellfire: Paradise is the abode of eternal bliss which Allah ﷺ has prepared for the pious people who have obeyed Allah and His Messenger ﷺ. In it they will find all that their hearts desire and their eyes find delight in.

Awakening His servants’ desire to vie with one another in obeying Him so that they will be admitted into Paradise, Almighty Allah says, “Race each other to forgiveness from your Lord and a Garden as wide as the heavens and the earth, prepared for the righteous.” (Soorat Aal-‛Imraan, 3:133)

As for Hellfire, it is the abode of eternal punishment which Allah has prepared for the unbelievers who have rejected Allah and disobeyed His messengers. In it they will find all kinds of unimaginable terrifying punishments and suffering.

Warning His servants against the Hellfire, Almighty Allah says, “Fear the Fire whose fuel is people and stones, made ready for the unbelievers.” (Soorat Al-Baqarah, 2:24)

We ask You, O Allah, to admit us into Paradise and to assist us in saying words and doing deeds that are bound to bring us closer to it, and we seek refuge with You from the Hellfire and from words and deeds that are bound to bring us closer to it.

4

Punishment and Bliss in the Grave: We believe that death is a fact, as the Qur’an states, “Say: ‘The Angel of Death, who has been given charge of you, will take you back and then you will be sent back to your Lord.’” (Soorat As-Sajdah, 32:11)

In fact, no one can deny death; we believe that when someone dies or is killed by any means whatsoever, it is because his appointed time has come, which he can neither delay nor bring forward, as the Qur’an states, “When the end of the term falls, they can neither delay it by a single moment, nor can they hasten it.” (Soorat Al-A‛raaf, 7:34)

• We also believe that whoever dies has actually moved to life hereafter.

• There are numerous authentic traditions attributed to Prophet Muhammad ﷺ in which he mentions punishment in the grave for the unbelievers and the wicked people and bliss for the believers and upright people. We believe in all this, but we abstain from trying to find out how this may happen, for the human mind cannot possibly comprehend its manner or reality, being part of the unseen world, such as Hellfire and Paradise, and not part of the material, visible world. The human mind can only carry out analogical reasoning and deductive arguments and reach judgements in matters which have the same relationship and whose laws are known in the visible world.

• Life in the grave is part of the unseen world which cannot be perceived by the senses. Were this possible, belief in the unseen would be of no benefit whatsoever, there would be no wisdom behind observance of religious duties and people would not find it necessary to bury the dead. As the Prophet ﷺ once observed, “Were it not that you would not bury one another, I would pray to Allah to make you hear the punishment in the grave which I can hear.” (Saheeh Muslim: 2868; Sunan An-Nasaa’ee: 2058). It is because animals are exempt from religious duties that they can hear the voices of those punished in their graves.



Benefits of Belief in the Last Day


1

Belief in the Last Day prompts people to lead a pious life, do righteous deeds, fear Allah ﷻ and stay away from selfishness and arrogance.

It is for this reason that the Qur’an frequently links belief in the Last Day with righteous deeds. The following verses are examples showing this: “The mosques of Allah should only be frequented by those who believe in Allah and the Last Day.” (Soorat At-Tawbah, 9:18)

“Those who believe in the hereafter do believe in it, and they are ever-mindful of their prayers.” (Soorat Al-Ana‛am, 6:92)

2

It reminds those who are totally absorbed in the life of the world and its transitory pleasures of the importance of vying with one another to obey Allah, urging them to do as many good deeds as long as they are alive and showing them that the worldly life is fleeting and that the hereafter is the everlasting abode.

After praising His messengers in the Qur’an and mentioning their righteous deeds, Allah ﷻ mentions the reason that prompted them to do such virtuous acts: “We purified their sincerity through sincere remembrance of the Abode.” (Soorat Saad, 38:46)

This means that their constant remembrance of the hereafter was the reason behind their performance of such acts.

When some of the Muslims became too sluggish to obey Allah and His Messenger ﷺ on one occasion, Allah ﷻ revealed the following verse, “Do you prefer the life of this world to the hereafter? But little is the comfort of this life, compared to that of the hereafter.” (Soorat At-Tawbah, 9:38)

Belief in the hereafter makes a person realise that all worldly comforts cannot be possibly compared to the eternal bliss in Paradise, nor is it worth one single dip in Hellfire; conversely, it makes one realise that all worldly discomforts and hardships for the sake of Allah cannot be possibly compared to punishment, in Hellfire, nor will it be compared to even one dip in Paradise.

3

It makes a person satisfied with his lot in life. He does not feel sad or lose heart if he misses a worldly opportunity. Rather, he does what he can possibly do, knowing for certain that Allah will not let the reward of anyone who does a good deed go to waste. If anything has been unjustly or deceitfully taken away from him, even if it is smaller than an atom, he will certainly get it back on the Day of Judgement when he will be in dire need of it. How then can someone feel sad when he knows for sure that he will get his rightful dues at a very critical moment on the Day of Judgement? How can he possibly grieve or be worried when he knows that it is the Best of Judges who will judge between him and his adversaries?



Belief in the Divine Decree



What Does Belief in the Divine decree Mean?



This means firm belief that everything, good and bad, takes place by the will of Allah, who does whatever He desires. Nothing can happen without His will, and not even the like of a weight of an atom in the heavens or the earth escapes His knowledge. However, He commands His servants to do certain acts and forbids them to do certain others, giving them free will to do whatever they please without being forced to do anything against their will. He created them as well as their ability to do things. He guides whomever He wills in His mercy and misguides whomever He wills in His absolute wisdom. He will not be questioned about what He does, but people will be questioned for what they do.


Belief in the divine decree is one of the pillars of faith. When the prophet ﷺ was once asked about faith, he said, “It is to believe in Allah, His angels, His books, His messengers, the Last Day and to believe in the divine decree, the good and the bad of it.” (Saheeh Muslim: 8)



What Does Belief in the Divine Decree Include?


Belief in Allah’s decree includes the following:

  • The belief that Allah ﷻ knows everything and that He knew everything about His creation even before He brought them into being. His foreknowledge includes their provisions, their appointed time in life, their words and deeds, all their doings, whatever they conceal and reveal, those who will be admitted into Paradise as well as those who will be sent to Hellfire. The Qur’an says, “He is Allah, other than Whom there is no other god, the Knower of the Invisible and the Visible.” (Soorat Al-Hashr, 59:22)
  • The belief that He recorded everything that will exist according to His prior knowledge in the Preserved Tablet (Book of Decrees), as the Qur’an states, “No misfortune can happen on earth or in yourselves but is recorded in a Book before We bring it into being.” (Soorat Al-Hadeed, 57:22) The prophet ﷺ also said in this connection, “Allah recorded the measurement of all matters pertaining to creation fifty thousand years before He created the heavens and the earth.” (Saheeh Muslim: 2653)
  • The belief that Allah’s will is absolute and cannot be frustrated or challenged by any power whatsoever. Indeed, everything takes place according to His will. Whatever He wills certainly takes place and whatever he does not will cannot possibly take place. The Qur’an says, “But you will not will unless Allah wills, the Lord of all the Worlds.” (Soorat At-Takweer, 81:29)
  • The belief that Allah ﷻ is the originator of everything, that He is the only Creator besides whom there is no creator, that everything in existence was created by Him and that He has power over all things, as the Qur’an states, “He created everything and determined it most exactly.” (Soorat Al-Furqaan, 25:2)



Man Has Free Will, Free Choice and the Ability to Do as he Pleases



Belief in the divine decree in no way implies that man does not have free will or that he cannot choose his own actions. This can be proven by Islamic textual evidence as well as by concrete evidence in the real world.

The Qur’an says, “That is the Day of Truth. So whoever wills should take the path that leads to his Lord.” (Soorat An-Naba’, 78:39)

Regarding man’s power and will to do as he chooses, the Qur’an states, “Allah will not force any soul beyond its capacity: It shall have the good which it has gained, and it shall suffer the evil which it has gained.” (Soorat Al-Baqarah, 2:286)

Based on concrete evidence in the real world, every person knows that he has the free will and ability to do whatever he wants. With these, he can choose between things. He can do some things willingly, such as walking, but he cannot possibly do some other things willingly, such as shivering or a sudden fall. It remains to be said that man’s will and ability can only take place following those of Almighty Allah, as the Qur’an states, “It is nothing but a Reminder to all the worlds to whoever among you wishes to go straight. But you will not will unless Allah wills, the Lord of all the Worlds.” (Soorat At-Takweer, 81:27-9)

“We have shown him the way, whether he be grateful or ungrateful.” (Soorat Al-Insaan, 76:3) .



Using Divine Decree as an Excuse to Commit Sins



The obligations of observing religious duties, abiding by divine commands and avoiding divine prohibitions is conditional upon man’s free will and ability to do as he chooses. Accordingly, the virtuous will be rewarded for choosing the path of righteousness, and the evil will be punished for choosing the path of wickedness.

Almighty Allah ﷻ does not impose a duty upon us that is beyond our capacity, and He does not want any one of us to neglect his religious duties by using divine decree as an excuse.

Besides, Allah ﷻ has endowed us with free will and the ability to choose our own actions and has clearly pointed to us the path of righteousness and that of wickedness. Therefore, if we disobey Allah, such disobedience comes only of our own choosing and thus we will have to bear the consequences of this choice.

If a person assaulted you, harmed you and robbed you of your money, claiming that he had done this because it had been decreed by Allah, you would certainly consider his excuse completely absurd and unacceptable, and you would definitely punish him and claim your money because he had actually done this entirely of his own volition.


Benefits of Belief in the Divine Decree


Belief in the divine decree has numerous benefits in people’s lives, including the following:

1

It is one of the best incentives to act in a manner that is pleasing to Almighty Allah in this life.

The believers are commanded to do what they can possibly do, to the best of their ability, relying upon Allah ﷻ. They believe that whatever they do cannot possibly yield any results without Allah’s will, because Allah is the Creator of the causes and effects.

The prophet ﷺ once said, “Cherish that which gives you benefit [in the Hereafter], seek help from Allah and do not lose heart. If anything unpleasant happens to you, do not say, ‘If I had done such-and-such, such-and-such would have happened instead.’ Rather say, ‘Qaddarallaahu wa maa shaa’a fa'ala (This is Allah’s decree, and He does whatever He wills)’, for the words ‘if only’ begin the work of Satan.” (Saheeh Muslim: 2664)

2

Belief in divine decree prompts man to realise his own self worth, and so he tries to avoid self-conceit and arrogance, for he knows that he does not know what has been decreed for him. This makes him admit his weakness and need for Allah ﷻ and thus urges him to turn to Him constantly.

Generally, man becomes conceited when something good happens to him and becomes rather sad and dejected when something bad befalls him. Only belief in the divine decree will protect man from such arrogance in times of ease and dejection in times of hardship, for he knows that things happen according to Allah’s decree and His foreknowledge.

3

Belief in divine decree helps overcome the vice of envy. A true believer does not envy people for the bounties Allah has bestowed upon them, for He knows that it is Allah ﷻ who has granted them such bounties in the first place and that envying others is tantamount to objecting to Allah’s decree.

4

It fills the believer’s heart with courage and strengthens his determination in the face of hardships, for he knows that his worldly provision and appointed time to depart the world has already been decreed by Allah ﷻ and that nothing will happen to him except what Allah has decreed for him.

5

It instils in him the numerous realities of faith. Consequently, he constantly seeks Allah’s assistance, places his trust in Allah after doing what is required of him and always shows his need for Allah from whom he derives support to stay on the straight path.

6

It provides him with reassurance and fills his heart with peace and contentment, for he knows that what has passed him by was not going to befall him and that what has befallen him was not going to pass him by.